News February 12, 2025
தொடர்ந்து சரியும் பங்குச்சந்தைகள்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739338242158_1241-normal-WIFI.webp)
இந்தியப் பங்குச் சந்தை இன்றும் சரிவுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 274 புள்ளிகள் சரிந்து 76,019 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 87.45 புள்ளிகள் சரிந்து 22,993 புள்ளிகளில் தொடர்கிறது. கடந்த சில நாட்களாகப் பங்குச்சந்தை சரிவால் பல லட்சம் கோடியை முதலீட்டாளர்கள் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 12, 2025
மீளாத இந்திய சந்தைகள்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739355133627_1246-normal-WIFI.webp)
கடந்த இரண்டு நாள்களாக கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தைகள், இன்று பெரிய மாற்றமின்றி காணப்பட்டன. நிஃப்டி இன்று 12 புள்ளிகள் குறைந்து 23,059 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. கடந்த 5 மாதங்களில் சுமார் 12 சதவீத மதிப்பினை இழந்திருக்கும் நிஃப்டி 50 பங்குகள், இன்று மீளும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த நிலையில், முன்னேற்றம் இன்றி ஏமாற்றமே மிஞ்சியது.
News February 12, 2025
பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739353068673_1246-normal-WIFI.webp)
கடந்த 6 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மார்ச் மாதம் பூமிக்கு திரும்பவுள்ளார். மார்ச் 25ஆம் தேதிக்கு பதிலாக 12ஆம் தேதியே விண்ணில் ஏவப்படும் SpaceX விண்கலம், புட்ச் வில்மோர் & சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வரவுள்ளது. இவர்கள் விண்வெளி மையத்தில் சிக்கிக் கொண்டதற்கு காரணம் பைடன்தான் என்று USAவின் தற்போதைய அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
News February 12, 2025
எனது தாத்தா ஒரு காதல் மன்னன்: சிரஞ்சீவி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739350737569_1173-normal-WIFI.webp)
நடிகர் சிரஞ்சீவி தனது தாத்தாவை வைத்து Fun செய்துள்ளார். வீட்டில் 2 பாட்டிகள் இருந்த போதும், தாத்தாவுக்கு போர் அடித்தால், அவர் வேறு பெண்களை தேடிச் செல்வார் எனவும், அவர் ஒரு காதல் மன்னன் என்றும் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். அதன் காரணமாகவே, தாத்தாவைப் போல் வந்து விடாதே என்று கூறி தன்னை வளர்த்ததாகவும், இருப்பினும் அவர் செய்த சில நல்ல காரியங்களால் தான் இந்த நிலைக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.