News February 12, 2025

நெல்லை ரயில்களில் இன்றும் பக்தர்கள் கூட்டம்!

image

திருச்செந்தூரில் நேற்று தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்ற நிலையில் இன்றும் நெல்லை – திருச்செந்தூர் பயணிகள் ரயில்களில் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் அதிகளவில் ஏறியதால், வழக்கமாக ரயிலில் செல்லும் அலுவலர்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் உள்ளிட்டோர் இடம் கிடைக்காமல் சிரமப்பட்டனர். பலர் நின்று கொண்டு பயணித்தனர். எனவே முக்கிய திருவிழா நாட்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க கோரிக்கை எழுந்துள்ளது

Similar News

News August 23, 2025

நெல்லை இளைஞர்களே.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க…

image

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் நடத்தும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. பாளை St. John’s கல்லூரியில் வைத்து நடைபெறவுள்ளது. 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. 2000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உள்ளன. வேலை தேடும் இளைஞர்கள் உடனே உங்கள் சுயவிபரம் (Resume), கல்விச்சான்றுகளுடன் மிஸ் செய்யாமல் கலந்து கொள்ளுங்கள். உடனே SHARE பண்ணுங்க

News August 23, 2025

நெல்லைக்கு அமைச்சர் நேரு திடீர் வருகை

image

நெல்லைக்கு நேற்று இரவு நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு வருகை தந்தார். இவரை பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் தலைமையில், துணை மேயர் ராஜூ உள்பட நிர்வாகிகள் வரவேற்றனர். நெல்லையில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமைச்சர் வந்துள்ளார்.

News August 23, 2025

நெல்லை இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (ஆகஸ்ட்.22) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!