News February 12, 2025

சத்துணவு திட்டத்தில் காலிப் பணியிடங்கள்

image

செங்கல்பட்டு மாவட்டம் சத்துணவு திட்டத்தில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒப்பந்த அடிப்படையில் இந்த நியமனம் நடைபெற உள்ளது. அலுவலக உதவியாளர், தகவல் தொகுப்பாளர், கணினி உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தால் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.8,000 – ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும்.

Similar News

News September 30, 2025

மறைமலைநகர் அருகே பயங்கர தீ விபத்து

image

மறைமலைநகர் அருகே இயங்கி வந்த தனியார் பாலிதீன் கவர் தயாரிப்பு நிறுவனத்தில் நேற்று மின்சாரக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இத்தீ விபத்தில் நிறுவனத்தின் சுமார் ரூ.70 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், இத்தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியல் பரபரப்பை ஏற்படுத்தியது.

News September 30, 2025

செங்கல்பட்டு: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு

image

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, செங்கல்பட்டு வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பொதுமக்கள், படாளம்-புக்கத்துறை பகுதிகளில் மேம்பாலப் பணி நடப்பதால், அவ்வழியைத் தவிர்க்க வேண்டும். இது தொடர்பாகக் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாகன நெரிசலைத் தவிர்க்க, பயணிகள் மாற்று வழியில் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News September 30, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (செப்.29) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!