News February 12, 2025
ஜெ., மறைவிற்கு பின் போட்ட திட்டம் இப்போ நடக்குமா?

MGR காலத்தில் இருந்து அரசியலில் இருக்கும் செங்கோட்டையன், சசி, TTVக்கு மிக நெருங்கிய வட்டத்தில் இருந்தவர். ஜெ., மறைவுக்கு பிறகு அவரை தான் முதல்வராக்க திட்டமிடப்பட்டிருந்தது. திடீர் திருப்பமாக தலைமை பதவிக்கு இபிஎஸ் வந்தார். அதன்பின், சசிகலா நீக்கம், பாஜக உடனான கூட்டணி முறிவு என அதிரடி காட்டியதால், தற்போது<<15434980>> EPS-க்கு <<>>செங்கோட்டையன் மூலம் செக் வைக்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Similar News
News March 10, 2026
ஈரான் மீது கொடூர தாக்குதல்.. டிரம்ப் எச்சரிக்கை

ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் மூடியதால், பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஹோர்மூஸ் வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்வதை தடுத்தால், ஈரான் மீது 20 மடங்கு கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். மரணமும், நெருப்பும், சீற்றமும் ஈரானை ஆளும் என்றும் ஈரான் ஒரு நாடாக மீண்டும் கட்டமைக்க முடியாத அளவிற்கு சிதையும் எனவும் எச்சரித்துள்ளார்.
News March 10, 2026
BREAKING: அதிமுக கூட்டணியில் இணைவதாக அறிவித்தார்

சிங்கத்தமிழர் முன்னேற்ற கழகம், அதிமுக கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ளது. EPS-ஐ நேரில் சந்தித்த அக்கட்சியின் தலைவர் Dr.RV பரதன் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தார். இக்கட்சி, TN-ல் மத்திய, தென்மாவட்டங்களில் முத்தரையர் சமூகத்தின் கணிசமான வாக்குகளை கொண்டுள்ளது. இதனிடையே, கள்ளர் முன்னேற்ற சங்கம் அதிமுக கூட்டணியில் இணைந்த நிலையில், திருச்சி சரவணத்தேவர் மழவராயர், EPS-ஐ நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
News March 10, 2026
நயினாருடன் பனிப்போரா? பாஜகவில் என்ன நடக்கிறது?

சமீபத்தில் தருமபுரம் ஆதீனத்தை சந்தித்துவிட்டு அந்த போட்டோக்களை X-ல் நயினார் பகிர்ந்திருந்தார். இதற்கு கமெண்ட் செய்த கே.பி.ராமலிங்கம், ஆன்மிகத்தில் மட்டுமல்ல தொண்டர்களின் நலனிலும் கவனம் செலுத்த வேண்டும் என கூறியிருந்தார். இதனால் இருவருக்குள்ளும் பனிப்போர் உண்டாகியுள்ளதா என SM-ல் கேள்வி எழுந்தது. இந்நிலையில் இதற்கு விளக்கமளித்த KP ராமலிங்கம், தங்களுக்குள் எந்த அதிருப்தியும் இல்லை என கூறியுள்ளார்.


