News February 12, 2025

அதிமுக உட்கட்சி விவகாரம் வழக்கில் இன்று தீர்ப்பு

image

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான தேர்தல் ஆணைய விசாரணை தடையை நீக்கக் கோரிய வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. இபிஎஸ் – செங்கோட்டையன் விவகாரம் மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இந்த சூழலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இத்தீர்ப்பை, அதிமுக தலைமை முதல் தொண்டர்கள் வரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Similar News

News February 12, 2025

பிரதமர் விமானம் மீது தீவிரவாத தாக்குதல் மிரட்டல்

image

பிரதமர் மோடியின் USA பயணத்திற்கு முன்னதாக, அவரது விமானம் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என மும்பை போலீசாருக்கு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த போலீசார், மிரட்டல் அழைப்பு விடுத்தவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. பிரான்ஸில் இருக்கும் பிரதமர் நாளை USA செல்கிறார்.

News February 12, 2025

WOW! பெண்களுக்கு ‘WORK FROM HOME’

image

ஆந்திராவில் பெண்களின் வேலை- வாழ்க்கை சமநிலையை பராமரிக்கும் வகையில் ‘WORK FROM HOME’ என்ற திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில CM சந்திரபாபு அறிவித்துள்ளார். பெண்கள் தங்கள் ஊர்களில் இருந்தே பணி செய்யும் வகையில், ஒவ்வொரு மாநகரம், நகரம், மண்டலத்தில் ‘COWORKING SPACE’ முறையில் ஐடி அலுவலகங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இத்திட்டம் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்டால் எப்படி இருக்கும்?

News February 12, 2025

செங்கோட்டையன் தனியாக ஆலோசனை?

image

அதிமுக உட்கட்சி விவகாரம், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, கோபிசெட்டிபாளையத்தில் அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் தனது ஆதாரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இபிஎஸ் பாராட்டு விழாவை அவர் புறக்கணித்த நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

error: Content is protected !!