News February 12, 2025
பழுதாகி நின்ற லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி

பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் தெற்கு தெருவைச் சேர்ந்த ரெங்கராஜ் (32) என்பவர் நேற்று இரவில் அவரது நண்பருடன் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றபோது முன்னால் சாலையில் பழுதாகி நின்ற லாரியின் மீது மோதியதில் ரெங்கராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த அவரது நண்பரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
Similar News
News April 4, 2026
பெரம்பலூர்: வாக்கு சாவடி மைய போலீசாருக்கு பயிற்சி வகுப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் வருகின்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அன்று வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரிய உள்ள காவல்துறையினர் மற்றும் வாக்குச்சாவடி சுற்று பாதுகாப்பு அணியின் காவல் பொறுப்பு அலுவலர்களுக்கு, மாவட்ட எஸ்.பி பிரபாகர் தலைமையில் பெரம்பலூரில் நேற்று பயிற்சி வகுப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் காவல்துறையினர் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் உள்ளிட்டவை குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.
News April 4, 2026
பெரம்பலூர்: வாக்கு சாவடி மைய போலீசாருக்கு பயிற்சி வகுப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் வருகின்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அன்று வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரிய உள்ள காவல்துறையினர் மற்றும் வாக்குச்சாவடி சுற்று பாதுகாப்பு அணியின் காவல் பொறுப்பு அலுவலர்களுக்கு, மாவட்ட எஸ்.பி பிரபாகர் தலைமையில் பெரம்பலூரில் நேற்று பயிற்சி வகுப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் காவல்துறையினர் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் உள்ளிட்டவை குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.
News April 3, 2026
பெரம்பலூர்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

பெரம்பலூர் மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!


