News February 12, 2025

‘மம்ப்ஸ்’ தடுப்பூசி மீண்டும் போடப்படுமா?

image

நாட்டில் 2 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு பொன்னுக்கு வீங்கி நோய் பரவ ஆரம்பித்துள்ளதால், நிறுத்தப்பட்ட மம்ப்ஸ் தடுப்பூசியை அரசு மீண்டும் செலுத்த வேண்டுமென எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வைரஸ் நோய் தொற்றுகளால் இந்நோய் குழந்தைகளை தாக்குகிறது. 2016 வரை இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கு செலுத்தப்பட்ட நிலையில், அதன் பின் இந்நோய் பரவல் இல்லாததால் மத்திய அரசு அதனை நிறுத்தியது. தற்போது மீண்டும் இந்நோய் பரவி வருகிறது.

Similar News

News March 10, 2026

விஜய்க்கு மீண்டும் CBI சம்மன்

image

கரூர் விவகாரம் தொடர்பான CBI விசாரணைக்கு டெல்லிக்கு பதில் சென்னையில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மார்ச் 15-ம் தேதி காலை டெல்லி தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராக மீண்டும் CBI சம்மன் அனுப்பியுள்ளது. அன்றைய தேதியில் விஜய் ஆஜராவார் என நிர்மல் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

News March 10, 2026

சிலிண்டர் தட்டுப்பாடு… அவசர ஆலோசனை

image

நாடு முழுவதும் வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உணவகங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் ஹர்தீப்சிங் புரி மற்றும் ஜெய்சங்கருடன், PM மோடி அவசர ஆலோசனை நடத்தினார். இதில் தட்டுப்பாட்டை தடுக்க எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முக்கியமாக வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட உள்ளதாம்.

News March 10, 2026

விமானங்களில் நீல நிற சீட்கள்.. காரணம் தெரியுமா?

image

விமானப் பயணம் பொதுவாக பலருக்கும் பயம் தரக்கூடும். அந்த பயத்தை போக்கி பயணிகள் அமைதியாக உணர விமானங்களில் பெரும்பாலும் நீல நிற சீட்கள் பயன்படுத்தப்படுகின்றன. உளவியல் ஆய்வுகளின்படி, நீல நிறம் நம்பிக்கையும் அமைதியும் தரும் நிறமாகக் கருதப்படுகிறது. மேலும், விமானத்தின் உள்ளே வெப்பநிலை குளிராகவும் ஈரப்பதமாகவும் இருக்கும். அந்த சூழலில் நீல நிறம் பயணிகளுக்கு மனநிம்மதி மற்றும் சாந்தமான உணர்வை தர உதவுகிறது.

error: Content is protected !!