News February 12, 2025
தினமும் ஒரு பொன்மொழி!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739296200233_785-normal-WIFI.webp)
✍அரசியல் அதிகாரம் வாக்களிப்பவர்களிடம் தங்கியில்லை; அரசியல் அதிகாரம் வாக்குகளை எண்ணுபவர்களிடம் தங்கியுள்ளது. ✍வரலாற்றை உருவாக்குவது நாயகர்கள் அல்ல; வரலாறுதான் நாயகர்களை உருவாக்குகிறது. ✍பட்டுக் கையுறைகளுடன் உங்களால் புரட்சி செய்ய முடியாது. ✍நான் யாரையும் நம்புவதில்லை; என்னையே கூட நம்புவதில்லை. ✍இந்த உலகில் வெல்ல முடியாத படைகளே இல்லை என்பதைத் தான் வரலாறு காட்டுகிறது – ஜோசப் ஸ்டாலின்.
Similar News
News February 12, 2025
ரிஷப் பண்ட் உயிரை காப்பாற்றிய இளைஞர் மரணம்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739336767660_1241-normal-WIFI.webp)
கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கியபோது அவரது உயிரைக் காப்பாற்றிய இளைஞர் காதல் விவகாரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். புர்காஜியைச் சேர்ந்த ரஜத்(25), மனு என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இருவரும் விஷம் குடித்த நிலையில், ரஜத் உயிரிழந்தார். நல்ல மனிதனை சாதி கொன்றுவிட்டது என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News February 12, 2025
தொடர்ந்து சரியும் பங்குச்சந்தைகள்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739338242158_1241-normal-WIFI.webp)
இந்தியப் பங்குச் சந்தை இன்றும் சரிவுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 274 புள்ளிகள் சரிந்து 76,019 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 87.45 புள்ளிகள் சரிந்து 22,993 புள்ளிகளில் தொடர்கிறது. கடந்த சில நாட்களாகப் பங்குச்சந்தை சரிவால் பல லட்சம் கோடியை முதலீட்டாளர்கள் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News February 12, 2025
BREAKING: அதிமுக வழக்கில் தீர்ப்பு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739337275583_55-normal-WIFI.webp)
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று ஐகோர்ட் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ரவீந்திரநாத், புகழேந்தி மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில், உட்கட்சி விவகாரம், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.