News February 11, 2025
JEE தேர்வில் 14 பேர் சதம்

JEE மெயின்ஸ் தேர்வுக்கான முடிவுகளை சற்றுமுன் NTA வெளியிட்டது. அதில், 14 பேர் நூற்றுக்கு நூறு எடுத்து சாதனை படைத்துள்ளனர். ஆனால், இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை. ராஜஸ்தானைச் சேர்ந்த 5 பேர் 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். IIT, NIT போன்ற நாட்டின் உயர்ந்த கல்லூரிகளில் சேர்வதற்கு இந்த JEE மதிப்பெண்கள் உதவுகின்றன. மெயின்ஸ் தேர்வைத் தொடர்ந்து மாணவர்கள் Advanced தேர்வு எழுத வேண்டும்.
Similar News
News September 10, 2025
சந்திரபாபு நாயுடு கிணற்றில் குதித்து சாக வேண்டும்: ஜெகன்

ஆந்திர CM சந்திரபாபு நாயுடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன் விமர்சித்துள்ள விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் யூரியா தட்டுப்பாடு நிலவுவதால், விவசாயிகள் நாள் முழுவதும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதைக் குறிப்பிட்டு, ‘இதற்கு CM சந்திரபாபு நாயுடு கிணற்றில் குதித்து செத்துப் போவது நல்லது’ என்று ஜெகன் பேசியுள்ளார். ஒரு முதல்வரை இப்படி விமர்சிக்கலாமா?
News September 10, 2025
சினிமா நடுவர்களுக்கானது அல்ல: பிருத்விராஜ் ஓபன் டாக்

‘ஆடுஜீவிதம்’ படத்திற்கு தேசிய விருது அளிக்கப்படாதது விவாதமானது. இதுகுறித்து பேசியுள்ள அப்படத்தின் நாயகன் பிருத்விராஜ், 10 பேர் உட்கார்ந்து ஒரு படத்தை பார்த்து மதிப்பீடு செய்யவோ (அ) ஒரு நடுவர் படம் பற்றி தீர்மானிப்பதற்காகவோ சினிமா உருவாக்கப்படுவதில்லை, மக்களுக்காகவே உருவாக்கப்படுகின்றன என கூறினார். அத்துடன், ஆடுஜீவிதம் படத்துக்கு மக்கள் ஏற்கெனவே மிகப்பெரிய விருதை வழங்கிவிட்டனர் என்றார்.
News September 10, 2025
சற்றுமுன்: புதிய பாதையை தேர்ந்தெடுத்தார் விஜய்

திருச்சியில் செப்.13-ம் தேதி புதிய பாதையில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். திருச்சியின் முக்கிய இடமான சத்திரம் பேருந்து நிலையம் அருகே பரப்புரை மேற்கொள்ள போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால், தற்போது, TVS டோல்கேட்டில் பரப்புரையை தொடங்கி, மரக்கடை MGR சிலை அருகே மக்கள் மத்தியில் விஜய் பேசுகிறார். இதன்பின், காந்தி மார்க்கெட் வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடைந்து, அரியலூர் செல்கிறார்.