News February 11, 2025

மாத சம்பளதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (EPFO) ஆண்டுக் கூட்டம் பிப்.28-ல் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் PF-க்கு வழங்கப்படும் வட்டியை உயர்த்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது. 2023-24 ஆண்டுக்கான வட்டி 8.25% ஆக உயர்த்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டுக்கு (2024-25) மேலும் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கான பணியாளர் பயன்பெறுவர்.

Similar News

News September 10, 2025

நாளை 4 மாவட்டங்களில் டாஸ்மாக் விடுமுறை

image

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி, நாளை 4 மாவட்டங்களில் ( தற்போதுவரை) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் செயல்படாது என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். உத்தரவை மீறி மது விற்பனை செய்தால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News September 10, 2025

GALLERY: ₹2 கோடிக்கு ஏர்போர்ட் லுக்.. அசத்திய ஹர்திக்!

image

வாழ்க்கை ஆடம்பரமாக இருப்பது கிரிக்கெட்டர்களுக்கு சகஜம் என்றாலும், ரசிகர்களுக்கு அது பெரும் ஈர்ப்புதான். அண்மையில், ஹர்திக் பாண்டியா ஏர்போர்ட்டுக்கு அணிந்து வந்த டிரஸ்ஸின் விலை சுமார் ₹2 கோடி இருக்கும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அவர் கையில் அணிந்திருந்த வாட்ச் மட்டும் ₹1.63 கோடி இருக்குமாம். நெட்டிசன்களும், ‘பல்லிறுக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்’ என கிண்டலாக பேசி வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News September 10, 2025

சந்திரபாபு நாயுடு கிணற்றில் குதித்து சாக வேண்டும்: ஜெகன்

image

ஆந்திர CM சந்திரபாபு நாயுடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன் விமர்சித்துள்ள விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் யூரியா தட்டுப்பாடு நிலவுவதால், விவசாயிகள் நாள் முழுவதும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதைக் குறிப்பிட்டு, ‘இதற்கு CM சந்திரபாபு நாயுடு கிணற்றில் குதித்து செத்துப் போவது நல்லது’ என்று ஜெகன் பேசியுள்ளார். ஒரு முதல்வரை இப்படி விமர்சிக்கலாமா?

error: Content is protected !!