News March 28, 2024
போக்குவரத்து காவல்துறையினருக்கு தொப்பி கண்ணாடி

திருவண்ணாமலை நகரத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து காவல்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் தொப்பி, கண் கண்ணாடி, மோர் போன்ற பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திருவண்ணாமலை நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் P.ரவிச்சந்திரன் உடனிருந்தார்.
Similar News
News October 23, 2025
திருவண்ணாமலையில் சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்க
News October 23, 2025
திருவண்ணாமலை: ஆற்றை கடக்க முடியாமல் தவித்த அரசு பேருந்து

திருவண்ணாமலையில் பெய்து வரும் மழை காரணமாக போளூர் – வேலூர் வரை செல்லும் 777 பேருந்து, நம்மியம்பட்டு அருகே பேராற்றில் மழை வெள்ளத்தை கடக்க முடியாமல் தவித்தது. இதனால் பேருந்தில் பயணித்த மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வேலைக்கு செல்லும் அனைவரும் தவித்தனர். இந்த இடத்தில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற மக்களின் நீண்ட கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
News October 23, 2025
திருவண்ணாமலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (அக்.23) ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெற உள்ளன. அதன்படி, துரிஞ்சாபுரம்- தனியார் திருமண மண்டபம், ஆர்ப்பாக்கம் – ஸ்ரீ முருகன் கோவில், கீழ்பென்னாத்துார்- தனியார் திருமண மண்டபம், பல்லமிஷன் தெரு, கீழ்பென்னாத்துார், வெம்பாக்கம்- விபிஆர்சி கட்டிடம் அரசங்குப்பம், வந்தவாசி- சமுதாயக்கூடம், கீழ்கொடுங்காலுார் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறுகின்றன.


