News February 11, 2025
சந்தேகத்திற்குரிய மிட்டாய் விற்றால் புகார் அளிக்கலாம்

சமூக ஊடகங்களில் போதைப்பொருட்கள் கலந்துள்ள மிட்டாய் வகைகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் முழுவதும் உணவுப் பாதுகாப்பு துறையின் மூலம் கடைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்குரிய மிட்டாய் அல்லது சாக்லேட் வகைகள் விற்பனை செய்வது தெரிந்தால் பொதுமக்கள் 94440-42322, 04562-225255 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.
Similar News
News March 3, 2026
ராஜபாளையத்தில் மீண்டும் போட்டியிட திமுக MLA விருப்பம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு முன்னிலையில் இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளார். உடன் திமுக நகரச் செயலாளர் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
News March 3, 2026
சிவகாசி அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை

சிவகாசி அருகே சித்தமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மாரீஸ்வரன் (32). திருமணமான இவருக்கு 2 பெண்குழந்தைகள் உள்ளனர். இவரது குடி பழக்கத்தால் சில தினங்களுக்கு முன் தகராறு எழுந்துள்ளது. இதனால் அவர் மனைவி, குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த மாரீஸ்வரன், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவர் விருதுநகர் G.H-ல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
News March 3, 2026
விருதுநகர் மாவட்ட மக்களுக்கு முக்கிய அப்டேட்

விருதுநகர் மக்களே குழந்தை பிறந்து 12 மாதங்களுக்குள் பெயருடன் இலவசமாக பிறப்பு சான்று பதிவு செய்யலாம். 12 மாதங்களுக்கு பின் 15 ஆண்டுகளுக்குள் ரூ.200 கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம். அவ்வாறு பெயருடன் பதிவு செய்ய செப்.26 கடைசி தேதி என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நகராட்சி, தாலுகா, பேரூராட்சி அலுவலங்கள், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளிட்ட இடங்களில் நேரில் அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது


