News February 11, 2025
யானை தாக்கி ஒருவர் மரணம்: மனைவி மாயம்

சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட ஐயன்கொல்லி அடுத்து நூல்புழ பகுதியை சேர்ந்த மனு மற்றும் அவரது மனைவி இருவரின் நேற்று தினம் இரவு முதல் காணவில்லை என்று தேடிவந்த நிலையில், அருகே உள்ள வனப்பகுதியில் மனு என்பவரை யானை தாக்கி மரணம் அடைந்த நிலையில் காணப்பட்டார். மேலும் இவருடன் இருந்த இவரின் மனைவியை வனத்துறை தேடும் பணி ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News August 22, 2025
குன்னூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

குன்னூர் சிம்ஸ் பார்க் அருகே உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணி முதல் 12.30 மணி வரை, மின்னு நுகர்வோர் குறைதீர் கூட்டம், செயற்பொறியாளர் சேகர் தலைமையில் நடைபெற உள்ளது. குன்னூர் நகரம் , எடப்பள்ளி, எடக்காடு, கோத்தகிரி நகரம், நெடுகுலா, அரவேணு, உபதலை குந்தா, சேலாஸ் வெஸ்ட் புரூக், ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 21, 2025
BREAKING: நீலகிரி இளைஞர் தவெக மாநாட்டில் பலி!

மதுரையில் இன்று நடைபெற்ற தவெக மாநாட்டில் கலந்துகொண்ட நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த ரோஷன் என்ற இளைஞர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். அதிக வெயில், கூட்ட நெரிசலால் மயக்கமடைந்த ரோஷனுக்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்டது. முதலுதவி சிகிச்சைக்கு பின் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News August 21, 2025
நீலகிரி: உள்ளூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

நீலகிரியில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Development manager பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. டிகிரி முடித்தவர்கள் <