News February 11, 2025
வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம்

வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் 154வது ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு ‘அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை’ என்ற முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். இன்று காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, 12ஆம் தேதி காலை 5.30 மணி என திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.
Similar News
News March 14, 2026
அரசியல் துரோகிக்கு பாடம் புகட்டப்படும்: OPS

அந்த நபர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் கிடையாது என்று EPS-யின் பெயரை குறிப்பிடாமல் OPS விமர்சித்துள்ளார். முதலமைச்சர் என்ற நிலைக்கு கொண்டு நிறுத்தியவரை (சசிகலா), அந்த நபர் (EPS) எந்த அளவிற்கு மரியாதை குறைவாக நடத்தினார் என்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்; அரசியலில் மிகப்பெரிய துரோகியான அந்த நபருக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்தார்.
News March 14, 2026
BREAKING: விலை ₹25,000 குறைந்தது

கார், பைக் வாங்க காத்திருப்போருக்கு இம்மாதம் பெரிய திருவிழா தான். காரணம், EV கார்கள் முதற்கொண்டு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. TATA, Maruti Suzuki உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் இந்த சலுகை திருவிழாவில் இணைந்துள்ளன. அவை எந்தெந்த கார், பைக்குகள், எவ்வளவு விலை குறைந்துள்ளது என்பதை மேலே உள்ள போட்டோஸை வலப்பக்கமாக SWIPE செய்து பாருங்கள். உறவுகளுக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 14, 2026
எப்படி இருந்த வைகோ, இப்படி ஆகிவிட்டார்: அண்ணாமலை

திமுக கூட்டணியில் மதிமுகவின் நிலைமையை பார்க்கும்போது பரிதாபமாக இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் பேசிய அவர், அரசியலில் எப்படி இருந்த வைகோ இப்படி(4 சீட்டு) ஆகிவிட்டார் எனவும், அந்தக் கூட்டணியில் மேலும் சிலர் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறினார். குறிப்பாக திருமாவளவன் 6 (அ) 7 சீட்டுக்கெல்லாம் OK சொல்லமாட்டார். அதனால், திமுக கூட்டணியில் பல மாற்றங்கள் ஏற்படும் சூழல் உள்ளது என்றார்.


