News February 11, 2025
முதல்முறையாக ஒரு கிராம் தங்கம் ₹8 ஆயிரம்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739248720783_55-normal-WIFI.webp)
ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதுவும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சவரனுக்கு ₹5,960 உயர்ந்துள்ளது. அதேபோல் முதல்முறையாக 1 கிராம் ₹8 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த மாதம் இதே தேதியில், ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராம் ₹7,315ஆக இருந்த நிலையில் இன்று ₹8,060ஆகவும், சவரன் ₹58,520ஆக இருந்த நிலையில் இன்று ₹64,480ஆகவும் உயர்ந்துள்ளது.
Similar News
News February 11, 2025
ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739290086827_1246-normal-WIFI.webp)
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா நாளை விளையாடவுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை மதியம் 1.30 மணிக்கு இப்போட்டி தொடங்கவுள்ளது. முதல் இரண்டு போட்டிகளை வென்றிருக்கும் இந்திய அணி, ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். ஏற்கெனவே 4 டி20 போட்டிகளை வென்று இந்தியா மொத்த தொடரையும் கைப்பற்றியுள்ளது.
News February 11, 2025
7 வயது மகனை கொன்ற தந்தை
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1737607430327_1241-normal-WIFI.webp)
பிஹாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில், தன் 7 வயது மகனை, தலையை துண்டித்து தந்தையே கொலை செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது. 2-ம் வகுப்பு படிக்கும் மகன் ஸ்கூல் ஃபீஸ் கேட்டு தொல்லை செய்யவே, இப்படி செய்ததாகவும், இனி அவனுக்காக படிப்பு செலவு தேவையில்லை, வீடு வாங்க வேண்டியதில்லை, மொத்தத்தில் செலவில்லை என்று சொல்லி அந்த கொடூரன் வீடியோவும் வெளியிட்டுள்ளான். இதனால் விஷயம் வெளியே தெரிய, அவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
News February 11, 2025
வார விடுமுறை: குவியும் சிறப்பு பஸ்கள்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739288507968_1204-normal-WIFI.webp)
வார விடுமுறை என்றாலே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு ஆயிரக்கணக்கானோர் புறப்பட்டு விடுகின்றனர். அந்த வகையில், வார விடுமுறைக்கு ஊருக்கு செல்பவர்களுக்காக, வரும் 14, 15ஆம் தேதிகளில் கிளாம்பாக்கத்தில் இருந்து பிற ஊர்களுக்கு 485 சிறப்பு பஸ்களும், கோயம்பேட்டில் இருந்து 102 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.