News February 11, 2025
ஸ்கூட்டர் மீது மோதிய லாரி: முதியவர் பலி

சுங்குவார்சத்திரம், பாப்பாங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன் (72). இவர், நேற்று (பிப்.10) காலை அதே கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி (45) என்பவரது பைக்கில் லிப்ட் கேட்டு சென்றார். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சந்தவேலுார் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி ஒன்று இவர்கள் மீது மோதியது. இதில் சந்திரன் உயிரிழந்தார். மாசிலாமணி படுகாயமடைந்தார். சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News March 11, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 10) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 10, 2026
காஞ்சிபுரம்: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

காஞ்சிபுரத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!
News March 10, 2026
காஞ்சி: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

காஞ்சி மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினாப் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <


