News March 28, 2024

விசிக தலைவர் திருமாவளவன் வேட்பு மனு ஏற்பு

image

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கு இந்தியா கூட்டணி சார்பில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார் இந்நிலையில் நேற்று அமைச்சர்களுடன் தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தாக்கல் செய்தார் இன்று மனு மீதான பரிசீலனை நடைபெற்றது இதில் திருமாவளவன் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது

Similar News

News February 17, 2026

கடலூர்: வீட்டில் இருந்தே மாதம் 9,000 சம்பாதிக்கலாம்!

image

இந்திய அஞ்சல் துறை ‘POMIS’ எனும் பெயரில் சூப்பரான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நீங்கள் ஒரு முறை முதலீடு செய்தால் போதும், முதலீடு செய்த பணத்திற்கேற்ப மாதந்தோறும் மிகச்சரியாக வட்டி வழங்கப்படும். எடுத்துக்காட்டுக்கு நீங்கள் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 வட்டியாக வழங்கப்படும். மேலும் 5 வருடங்களுக்கு பிறகு முதலீடு செய்த பணம் திருப்பி வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க!

News February 17, 2026

கடலூர்: 1,246 மனுக்களை பெற்ற ஆட்சியர்

image

கடலூரில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 1,246 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் அளித்தனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News February 17, 2026

4 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள்: ஆட்சியர் தகவல்

image

2026 சட்டமன்றத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரி, பணிக்கன் குப்பம் அண்ணா பல்கலைக்கழகம், தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரி, சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி ஆகிய 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!