News February 11, 2025

திருச்சி: வெளிநாட்டு பணம் பறிமுதல்

image

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் இன்று 10.02.25 திருச்சி விமான நிலையம் வந்த பெண் பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் ₹.3.95 லட்சம் மதிப்புடைய 271 வெளிநாட்டு நோட்டுகள் மற்றும் ₹.4.50 லட்சம் இந்திய ரூபாய் என ₹.8.45 லட்சம் பணத்தை உரிய அனுமதியின்றி எடுத்து வந்தது தெரிய வந்தது. பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News March 4, 2026

திருச்சி: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு

image

திருச்சியில் செயல்பட்டு வந்த எல்பின் நிதி நிறுவனம், பண மோசடி செய்ததாக 8,441 பேர் புகார் அளித்திருந்தனர். அவர்களில் இதுவரையில் 3942 பேர் மட்டுமே பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி வழக்கு தொடர்புடைய ஆவணங்களை ஆஜர் செய்துள்ளனர். மீதமுள்ள நபர்கள் உரிய ஆவணங்களுடன், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி, வாக்குமூலம் வழங்க வேண்டும் என துணை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News March 3, 2026

திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

image

திருச்சி மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவினருடன் இணைந்து, மோப்பநாய் உதவியுடன் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். பயணிகளின் உடைமைகள், நடைமேடைகள், பார்சல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. வெளி மாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்றது.

News March 3, 2026

திருச்சி: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

image

திருச்சி மக்களே, <>இங்கு க்ளிக் செய்து <<>>தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க.. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க…

error: Content is protected !!