News February 11, 2025

இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்

image

TN முழுவதும் தைப்பூச நாளான இன்று அரசு விடுமுறை என்றாலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களது அசையா சொத்துகளை மங்களகரமான நாளில் பதிவு செய்ய விரும்புவதால் இன்றைய தினம் ஆவணப் பதிவுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக காலை 10 மணி முதல் பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும். ஆனால், விடுமுறை நாளுக்கான கட்டணம் வசூலிக்கப்படும்.

Similar News

News February 11, 2025

வீட்டிற்கு ஒரு வாக்கை குறி வைக்கும் விஜய்

image

தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இரண்டாவது நாளாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். நேற்று மதியம் சுமார் 2.30 மணி நேரம் அவர்களது சந்திப்பு நடைபெற்ற நிலையில், இன்று ஒரு மணி நேரம் சந்திப்பு நடந்தது. இதில், தவெகவின் வாக்கு வங்கி குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், வீட்டிற்கு ஒரு வாக்கை உறுதி செய்ய பிரசாந்த் கிஷோர் அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News February 11, 2025

21,413 காலியிடங்கள் 10-வது பாஸ் போதும்

image

இந்திய அஞ்சல் துறையில் 21,413 காலியிடங்களை (Gramin Dak Sevaks- GDS) நிரப்புவதற்கான <>அறிவிப்பு<<>> வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு மட்டும் இதில் 2,292 பணியிடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினி அறிவும் அடிப்படை தகுதிகளாகும். சைக்கிள் (அ) இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18-40. மெரிட் அடிப்படையில் ஆட்தேர்வு நடைபெறும். மார்ச் 3 வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

News February 11, 2025

அடுத்த விடுமுறை எப்போ தெரியுமா?

image

தைப்பூசம் தினத்தையொட்டி இன்று அரசு பொது விடுமுறை அளித்துள்ளது. இந்த நேரத்தில் மக்கள் மனதில் வரும் முதல் கேள்வி, அடுத்த அரசு விடுமுறை எப்போ என்பதுதான். அதைத்தீர்த்து வைக்கதான் நாங்கள் இருக்கிறோம். அரசின் அட்டவணைப்படி, மார்ச் 30 & 31 ஆகிய தேதிகளில் முறையே உகாதி & ரம்ஜான் விடுமுறை வருகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையாகி போனது. பரவால்ல, ரம்ஜான் விடுமுறையை கொண்டாடுங்க.

error: Content is protected !!