News February 11, 2025
இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1738902885318_785-normal-WIFI.webp)
TN முழுவதும் தைப்பூச நாளான இன்று அரசு விடுமுறை என்றாலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களது அசையா சொத்துகளை மங்களகரமான நாளில் பதிவு செய்ய விரும்புவதால் இன்றைய தினம் ஆவணப் பதிவுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக காலை 10 மணி முதல் பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும். ஆனால், விடுமுறை நாளுக்கான கட்டணம் வசூலிக்கப்படும்.
Similar News
News February 11, 2025
வீட்டிற்கு ஒரு வாக்கை குறி வைக்கும் விஜய்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1737478049843_55-normal-WIFI.webp)
தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இரண்டாவது நாளாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். நேற்று மதியம் சுமார் 2.30 மணி நேரம் அவர்களது சந்திப்பு நடைபெற்ற நிலையில், இன்று ஒரு மணி நேரம் சந்திப்பு நடந்தது. இதில், தவெகவின் வாக்கு வங்கி குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், வீட்டிற்கு ஒரு வாக்கை உறுதி செய்ய பிரசாந்த் கிஷோர் அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News February 11, 2025
21,413 காலியிடங்கள் 10-வது பாஸ் போதும்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739272845143_347-normal-WIFI.webp)
இந்திய அஞ்சல் துறையில் 21,413 காலியிடங்களை (Gramin Dak Sevaks- GDS) நிரப்புவதற்கான <
News February 11, 2025
அடுத்த விடுமுறை எப்போ தெரியுமா?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739266819196_1246-normal-WIFI.webp)
தைப்பூசம் தினத்தையொட்டி இன்று அரசு பொது விடுமுறை அளித்துள்ளது. இந்த நேரத்தில் மக்கள் மனதில் வரும் முதல் கேள்வி, அடுத்த அரசு விடுமுறை எப்போ என்பதுதான். அதைத்தீர்த்து வைக்கதான் நாங்கள் இருக்கிறோம். அரசின் அட்டவணைப்படி, மார்ச் 30 & 31 ஆகிய தேதிகளில் முறையே உகாதி & ரம்ஜான் விடுமுறை வருகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையாகி போனது. பரவால்ல, ரம்ஜான் விடுமுறையை கொண்டாடுங்க.