News February 11, 2025
தினமும் ஒரு பொன்மொழி!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739207358781_785-normal-WIFI.webp)
➤ தோல்வியடைந்தவர்களின் சரித்திரங்களைப் படியுங்கள், அதிலிருந்து தான் வெற்றிக்கான வழி கிடைக்கும் ➤ இலக்கை குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும்புள்ளி தான் ➤ ஆண்டவன் சோதிப்பது எல்லாரையும் இல்லை; சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டும் தான். ➤ சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டும் என்றால் முதலில் சூரியனைப் போல எரியக் கற்றுக்கொள்ள வேண்டும் – புத்தர்.
Similar News
News February 11, 2025
மனிதர்களோடு விண்வெளிக்கு பறக்கும் ஈக்கள்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739261058625_1173-normal-WIFI.webp)
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில், மனிதர்களுடன் சேர்த்து ஈக்களையும் அனுப்ப டாடா நிறுவன விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். விண்வெளிப் பயணம் உயிரினங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும், விண்வெளிக்கு பறக்கும் போது அவை என்ன மாதிரியான உயிரியல் மாற்றங்கள் மற்றும் அழுத்தங்களைச் சந்திக்கின்றன என்பதையும் மதிப்பிட, ஈக்களை அனுப்ப உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
News February 11, 2025
பங்குச்சந்தை சரிவு: ரூ.10 லட்சம் கோடி மாயம்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739270414454_347-normal-WIFI.webp)
இந்திய பங்குச்சந்தைகள் இன்று பெரும் சரிவை சந்தித்தன. சர்வதேச அளவில் நெகடிவான மார்க்கெட் நிலவரம், டாலர் மதிப்பு உயர்வு, டிரம்பின் தடைகள் ஆகியவற்றால் சந்தை சரிந்தது. மதியம் 1 மணி நிலவரத்தின் போதே, நிப்டி 330 புள்ளிகள் குறைந்து 23,048 ஆகவும், சென்செக்ஸ் 1074 புள்ளிகள் சரிந்து76,223 ஆகவும் இருந்தது. இதனால் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு குறைந்ததால் முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
News February 11, 2025
ரத்தக் களறியில் பங்குச்சந்தைகள்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739270184650_1246-normal-WIFI.webp)
இந்திய பங்குச்சந்தைகள் சரிவினை சந்தித்து வரும் நிலையில், சிறிய நிறுவனங்கள் கடுமையான சரிவைக் கண்டிருக்கின்றன. குறிப்பாக, வோடஃபோன் நிறுவனம் 54%, ஹிந்துஸ்தான் ஜிங்க் 49%, HUDCO 46%, CPCL 61%, ரேமண்ட் 58% சரிந்திருக்கிறது. இது முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நிய முதலீட்டாளர்கள் சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை இந்திய சந்தையில் இருந்து வெளியே எடுத்துள்ளனர்.