News March 28, 2024
தேனி: குளு குளு மலர் கண்காட்சி

கூடலூர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டம் தேக்கடியில் குமுளி கிராம பஞ்சாயத்து மற்றும் தேக்கடி ஹார்ட்டிகல்ச்சர் சொசைட்டி இணைந்து நடத்தும்16 வது மலர் கண்காட்சி மார்ச் 27 முதல் மே 12 வரை நடைபெறுகிறது. இதில் பல வகையான வண்ண மலர்கள் மற்றும் அழகு தாவரங்கள் மற்றும் வீட்டு அலங்கார செடிகள் விற்பனை மற்றும் கண்காட்சி நடைபெறும். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
Similar News
News February 17, 2026
தேனி: டிகிரி போதும்.. ரூ.58,000 சம்பளத்தில் வேலை ரெடி

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாகவுள்ள 650 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த 20 – 28 வயதுடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.58,514 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News February 17, 2026
தேனி: 16 வயது சிறுமிக்கு பாலியல் அத்துமீறல்

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். Instagram மூலம் இவருக்கும், 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் சிறுமியை அழைத்து சென்று பாலியல் அத்துமீறல் செய்ததாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் லட்சுமணன் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 17, 2026
தேனி அருகே ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

தேனி மாவட்டம், குள்ளபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் பாண்டி. இவருக்கு ஞானேஸ்வரன் என்ற ஒரு வயது ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் குழந்தைக்கு கடந்த ஆறு மாத காலமாக உடல்நிலை சரியில்லாமல் போய் உள்ளது. இதையடுத்து நேற்று திடீரென குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து ஜெயமங்களம் போலீசார் வழக்குப்பதிவு.


