News February 10, 2025
திமுக அமைச்சர் ஜெயில் செல்வார்: அண்ணாமலை
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1736527535374_1204-normal-WIFI.webp)
2026ஆம் ஆண்டு தே.ஜ. கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைத்தவுடன் சிறைக்கு செல்லப் போகும் முதல் நபராக அமைச்சர் காந்தி இருப்பர் என்று அண்ணாமலை பேசியுள்ளார். பொங்கல் தொகுப்பில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டத்தில் ஆண்டுதோறும் அமைச்சர் காந்தி ஊழல் செய்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். அவரை உடனடியாக முதல்வர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News February 11, 2025
BREAKING: சீட் பிடிப்பதில் சண்டை: மாணவன் உயிரிழப்பு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739258497078_55-normal-WIFI.webp)
தனியார் பள்ளி வாகனத்தில் சீட் பிடிப்பது தொடர்பாக மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் உயிரிழந்தான். சேலம் எடப்பாடியில், நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்ப வாகனத்தில் ஏறிய மாணவர்கள், சீட் பிடிக்க சண்டையிட்டுள்ளனர். அப்போது ஒரு மாணவன் எட்டி உதைத்ததில், மார்பில் காயமடைந்த 9-ம் வகுப்பு மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதனால், பாதுகாப்பு கருதி, பள்ளி முன்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
News February 11, 2025
கங்குலியை முந்திய ரோஹித் ஷர்மா
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739253605313_1173-normal-WIFI.webp)
இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு, அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் வெற்றிகளைக் குவித்தவர்களின் பட்டியலில், 98 வெற்றிகளுடன் ரோஹித் ஷர்மா 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 179 வெற்றிகளுடன் தோனி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 137 வெற்றிகளுடன் கோலி 2ஆம் இடத்திலும், 104 வெற்றிகளுடன் முகமது அசாருதீன் 3ஆம் இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் கங்குலி (97) 5ஆவது இடத்தில் உள்ளார்.
News February 11, 2025
‘ஊழல்’.. அண்ணாமலைக்கு அமைச்சர் பதிலடி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739254415443_55-normal-WIFI.webp)
இலவச வேட்டி, சேலை திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். உண்மைக்கு மாறான, அடிப்படை ஆதாரமற்ற, தேவையற்ற வதந்திகளை அண்ணாமலை பரப்புகிறார். மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்ட தர அளவீடுகளின்படி தரமான வேட்டி, சேலைகள் விநியோகம் செய்யப்பட்டது. வீண் பழி சுமத்தி, களங்க ஏற்படுத்த பகல் கனவு காணும் எண்ணம் எந்நாளும் நிறைவேறாது என்று தெரிவித்துள்ளார்.