News March 28, 2024
உலகின் மிகப்பெரிய அனகோண்டா உயிரிழப்பு

பிரேசிலில் உள்ள உலகின் மிகப்பெரிய ராட்சத அனகோண்டா பாம்பு உயிரிழந்தது. அமேசான் காட்டில் வாழ்ந்து வந்த இந்த அனகோண்டா பாம்பை, ‘பிரையன் ஃப்ரை’ என்பவருடைய அறிவியல் ஆராய்ச்சி குழு சமீபத்தில் கண்டு பிடித்தது. இந்த பாம்பு பற்றிய ஆவணப்படம் சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியானது. இந்நிலையில், இன்று மர்ம நபர்களால் அந்த பாம்பு சுட்டுக் கொல்லப்பட்டதாக அங்கு வாழும் பழங்குடியினரால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 28, 2025
காஷ்மீர் மக்களுக்கு நாங்க இருக்கோம்: பாக்., PM

இந்திய ராணுவம் 1947-ல் காஷ்மீரை ஆக்கிரமித்ததாக கூறி, ஆண்டுதோறும் அக்.27-ஐ கருப்பு நாளாக பாக்., கடைப்பிடித்து வருகிறது. இதனையொட்டி PAK PM ஷெபாஸ் ஷெரீப் & PAK அதிபர் ஆசிப் அலி சர்தாரி, காஷ்மீர் மக்களையும், அவர்களின் உரிமையையும் இந்தியா நிராகரிப்பதாக கூறியுள்ளனர். மேலும், இப்போராட்டத்தில் காஷ்மீர் மக்கள் தனியாக இல்லை எனவும், அவர்களுடன் 24 கோடி பாகிஸ்தானியர்கள் நிற்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
News October 28, 2025
Rohit அதிரடியாக விளையாட விரும்பவில்லை: முகமது கைஃப்

ஆஸி.,க்கு எதிரான முதல் ODI போட்டியில் சொதப்பிய ரோஹித், 2-வது (73 ரன்கள்), கடைசி (121 ரன்கள்) போட்டிகளில் ரன்களை குவித்தார். தனது ரன்களை வைத்தே ரசிகர்கள் தன்னை மதிப்பிடுவார்கள் என்பதை ரோஹித் புரிந்து வைத்துள்ளதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். 20 பந்துகளில் 40 ரன்கள் என்ற அதிரடி விளையாட்டை ரோஹித் விளையாட விரும்பவில்லை என்ற அவர், களத்தில் நீண்ட நேரம் இருக்க விரும்புவதாகவும் கூறினார்.
News October 28, 2025
கோர்ட்டில் மன்னிப்பு கேட்ட கங்கனா ரனாவத்

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து 2020-21 ஆம் ஆண்டில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. ₹100 கொடுத்தால் போதும் போராட்டத்துக்கு வந்துவிடுவார்கள் என மூதாட்டி ஒருவரை கேலி செய்யும் வகையில், பகிரப்பட்ட Meme-ஐ கங்கனா ரனாவத் Retweet செய்திருந்தார். இதற்கு எதிராக மூதாட்டியின் கணவர் பஞ்சாப் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் நேற்று ஆஜரான கங்கனா தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டார்.


