News March 28, 2024

உலகின் மிகப்பெரிய அனகோண்டா உயிரிழப்பு

image

பிரேசிலில் உள்ள உலகின் மிகப்பெரிய ராட்சத அனகோண்டா பாம்பு உயிரிழந்தது. அமேசான் காட்டில் வாழ்ந்து வந்த இந்த அனகோண்டா பாம்பை, ‘பிரையன் ஃப்ரை’ என்பவருடைய அறிவியல் ஆராய்ச்சி குழு சமீபத்தில் கண்டு பிடித்தது. இந்த பாம்பு பற்றிய ஆவணப்படம் சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியானது. இந்நிலையில், இன்று மர்ம நபர்களால் அந்த பாம்பு சுட்டுக் கொல்லப்பட்டதாக அங்கு வாழும் பழங்குடியினரால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 29, 2025

திமுக கூட்டணியில் காங்., நீடிக்குமா? வந்தது விளக்கம்

image

திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த காங்., குழு அமைத்த பிறகு, கூட்டணி பற்றி சந்தேகமே வேண்டாம் என முத்தரசன் கூறியுள்ளார். கடந்த 4 தேர்தல்களாக திமுக கூட்டணி கொள்கை பிடிப்புடன் உறுதியாக இருப்பதாக தெரிவித்த அவர், 2026-ல் கூட்டணி நீடித்து பெருவெற்றியை பெறும் என பேசியுள்ளார். அத்துடன், எதிர்த் தரப்பில், EPS-ஆல் கூட்டணியும் அமைக்க முடியவில்லை, கட்சியையும் ஒருங்கிணைக்க முடியவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.

News December 29, 2025

விஜய் கதையில் பிரதீப் ரங்கநாதன்?

image

கடைசியாக ’லவ் டுடே’ படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன், அப்போதே விஜய்யை சந்தித்து Science Fiction கதை ஒன்றை சொல்லியிருக்கிறார். ஆனால் அதில் நடிக்க விஜய் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்தக் கதை கொஞ்சம் மாற்றி எழுதி, தற்போது பிரதீப் ரங்கநாதனே அதில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. LIK படத்தின் ரிலீசுக்கு பிறகு இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கலாம் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

News December 29, 2025

30 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை.. ஆனந்தத்தில் கிராமம்

image

இத்தாலியின் Pagliara dei Marsi என்ற கிராமத்தில், கடந்த 30 ஆண்டுகளில் ஒரு குழந்தையும் பிறக்கவில்லை. 20 பேர் மட்டுமே இருந்த ஊரில் ஸ்கூல்கள் மூடப்பட்டன, எங்கு பார்த்தாலும் முதியவர்கள் மட்டுமே காணப்பட்டனர். ஏன் இந்த கொடுமை என மனம் துவண்டு போனவர்களுக்கு, நம்பிக்கையை கொடுக்கும் விதமாக லாரா என்ற பெண் குழந்தை கடந்த 8 மாதங்களுக்கு முன் பிறந்துள்ளது. குழந்தையின் வருகையை உள்ளூர் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

error: Content is protected !!