News March 28, 2024

அரியலூர்: தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல்

image

அரியலூர் நகர அண்ணா சிலை அருகே காவல்துறை உணவகத்தின் முன்பாக இன்று கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயன்படும் வகையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ்  திறந்து வைத்து, பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.

Similar News

News January 19, 2026

அரியலூர்: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

image

அரியலூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 19, 2026

அரியலூர்: அரசு பள்ளிகளில் மிதிவண்டிகள் வழங்கல்

image

உடையார்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டார். பின் உடையார்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, உடையார்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மொத்தம் ரூ.5.14 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

News January 19, 2026

அரியலூர்: அடிப்படை பிரச்சனைக்கு உடனடி தீர்வு

image

அரியலூர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் <>இந்த லிங்கை கிளிக் செய்து<<>> பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!