News February 10, 2025
செங்கல்பட்டு பாஜக இளைஞரணி செயலாளர் கைது

தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் லியாஸ் தமிழரசன் (24). இவர் தனியார் சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு சட்ட படிப்பு படித்து வருகிறார். மேலும் இவர் பாஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில், 22 வயது இளம்பெண்ணை காதலிப்பாக கூறி உல்லாசமாக இருந்து திருமணம் செய்ய மறுத்து வீடியோவை வெளியிடுவதாக கூறி மிரட்டியுள்ளார். புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
Similar News
News September 30, 2025
திருப்போரூர்: ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

தி.நகரைச் சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார் (19). இவர் நேற்று (செப்.29) மதியம் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து திருப்போரூர் அருகே உள்ள தையூர் ஏரியில் குளிக்க சென்றார். அப்போது சந்தோஷ்குமார் மட்டும் ஏரியில் குளித்தபோது நீரில் மூழ்கினார். கூடவந்த நண்பர்களுக்கு நீச்சல் தெரியாததால் சந்தோஷ்குமாரை காப்பாற்ற முடியவில்லை. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் வந்து உடலை சடலமாக மீட்டனர்.
News September 30, 2025
செங்கல்பட்டு: வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு

செங்கல்பட்டு மக்களே வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்த நீங்கள் இனி எங்கும் போக வேண்டாம். ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள சொத்து வரி, நிலுவைத் தொகை என அனைத்தையும் வீட்டிலிருந்தே ஆன்லைனில் செலுத்தவும், செலுத்திய விவரங்களை பார்க்கவும் முடியும். இங்கு <
News September 30, 2025
செங்கல்பட்டு: IOB வங்கியில் வேலை

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Specialist Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, MBA, M.Sc, MCA, M.E/M.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் Rs.64,820 முதல் Rs.1,05,280 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி 03.10.2025 ஆகும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <