News February 10, 2025
போருக்கு முற்றுப்புள்ளி? புடினுடன் டிரம்ப் பேச்சு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1737388407754_1173-normal-WIFI.webp)
உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் பேசியதாக USA அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். போரில் உயிர் பலி ஏற்படுவதை தான் விரும்பவில்லை என புடின் பகிர்ந்ததாகவும் தெரிவித்தார். போரில் லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் நம் குழந்தைகள் போன்றவர்கள். இதற்கு மேலும் உயிர் பலி நிகழ்வதை புடின் தடுத்து நிறுத்துவார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News February 11, 2025
தைப்பூசம்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று லீவ்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739215064555_785-normal-WIFI.webp)
முருகப்பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூசம் திருவிழா இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தைப்பூசம் தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என 2021ல் அன்றைய முதல்வர் EPS சட்டம் இயற்றினார். அதன்படி, இன்று அரசு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது.
News February 11, 2025
இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1738902885318_785-normal-WIFI.webp)
TN முழுவதும் தைப்பூச நாளான இன்று அரசு விடுமுறை என்றாலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களது அசையா சொத்துகளை மங்களகரமான நாளில் பதிவு செய்ய விரும்புவதால் இன்றைய தினம் ஆவணப் பதிவுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக காலை 10 மணி முதல் பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும். ஆனால், விடுமுறை நாளுக்கான கட்டணம் வசூலிக்கப்படும்.
News February 11, 2025
டெல்லியில் கிரிமினல் வழக்கு உள்ள MLAக்கள் குறைவு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1738996875472_1241-normal-WIFI.webp)
டெல்லி சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 70 வேட்பாளர்களில் 31 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிட்ட 699 வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்த ஜனநாயக சீர்திருத்த சங்கம், ஒருவர் மீது கொலை முயற்சியும், இருவர் மீது பெண்களுக்கு எதிரான வழக்கும் உள்ளதாகக் கூறியுள்ளது. இது கடந்த தேர்தலில் கிரிமினல் வழக்கு உள்ளதாக அறிவித்த 43 MLAக்களை விட குறைவாகும்.