News February 10, 2025
ODIல் அதிக சதம் அடித்த வீரர்கள் இவர்கள் தான்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739140539838_785-normal-WIFI.webp)
ODI கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் விராட் கோலி (50) முதலிடத்தில் நீடிக்கிறார். சச்சின் டெண்டுல்கர் (49) 2வது இடத்திலும், ரோகித் ஷர்மா (32) 3வது இடத்திலும் உள்ளனர். ரிக்கி பாண்டிங் (30), ஜெயசூர்யா (28), ஆம்லா (27), ஏபி டி வில்லியர்ஸ் (25), கிறிஸ் கெய்ல் (25) ஆகியோர் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். டாப்-3ல் உள்ள மூவரும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 11, 2025
டெல்லியில் கிரிமினல் வழக்கு உள்ள MLAக்கள் குறைவு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1738996875472_1241-normal-WIFI.webp)
டெல்லி சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 70 வேட்பாளர்களில் 31 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிட்ட 699 வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்த ஜனநாயக சீர்திருத்த சங்கம், ஒருவர் மீது கொலை முயற்சியும், இருவர் மீது பெண்களுக்கு எதிரான வழக்கும் உள்ளதாகக் கூறியுள்ளது. இது கடந்த தேர்தலில் கிரிமினல் வழக்கு உள்ளதாக அறிவித்த 43 MLAக்களை விட குறைவாகும்.
News February 11, 2025
நகை அடகு நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1738535532075_1204-normal-WIFI.webp)
வங்கி அல்லாத அடகு நிறுவனங்கள், RBI விதிமுறைகளை பின்பற்றாமல் தங்க நகைகளை ஏலம் விடுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார். கடன் நிறுவனங்கள் அனைத்துக்குமே ஒரே மாதிரியான விதிமுறைகளைத் தான் RBI வகுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் நேரில் வராவிட்டாலும், நகை மதிப்பீடு முழுமை அடையாவிட்டாலும் ஏலம் விட முடியாது என்றார்.
News February 11, 2025
பும்ரா CTல் விளையாடுவாரா? இன்று தெரியும்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739226691257_785-normal-WIFI.webp)
இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அணியில் மாற்றம் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைவதால் BCCI இன்று இறுதி முடிவை எடுக்கும் என தெரிகிறது. முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் பும்ரா இன்னும் முழுமையாக குணமடையாததால், அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்போட்டியை அவர் தவறவிட்டால், அது IND அணிக்கு பெரும் இழப்பாக அமையும்.