News February 10, 2025
உங்கள் குழந்தைகளுக்கு போன் கொடுக்கிறீர்களா?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739125999512_785-normal-WIFI.webp)
குழந்தைகள் அழுகையை நிறுத்த செல்போனைக் கொடுக்கிறீர்களா? அப்படியானால், நீங்கள் அவர்களுக்கு தீங்கு செய்கிறீர்கள். குழந்தைகள் 6 மாதத்திலிருந்து தங்களைச் சுற்றியுள்ள சூழலைப் பார்த்து பேசக் கற்றுக்கொள்கிறார்கள். இவ்வயதில் அவர்களிடம் போன் கொடுப்பதால், 3 வயது வரை பேச முடியாமல் போகும் அபாயம் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். எதிர்காலத்தில் ஆட்டிசம் போன்ற பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கின்றனர்.
Similar News
News February 11, 2025
நகை அடகு நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1738535532075_1204-normal-WIFI.webp)
வங்கி அல்லாத அடகு நிறுவனங்கள், RBI விதிமுறைகளை பின்பற்றாமல் தங்க நகைகளை ஏலம் விடுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார். கடன் நிறுவனங்கள் அனைத்துக்குமே ஒரே மாதிரியான விதிமுறைகளைத் தான் RBI வகுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் நேரில் வராவிட்டாலும், நகை மதிப்பீடு முழுமை அடையாவிட்டாலும் ஏலம் விட முடியாது என்றார்.
News February 11, 2025
பும்ரா CTல் விளையாடுவாரா? இன்று தெரியும்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739226691257_785-normal-WIFI.webp)
இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அணியில் மாற்றம் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைவதால் BCCI இன்று இறுதி முடிவை எடுக்கும் என தெரிகிறது. முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் பும்ரா இன்னும் முழுமையாக குணமடையாததால், அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்போட்டியை அவர் தவறவிட்டால், அது IND அணிக்கு பெரும் இழப்பாக அமையும்.
News February 11, 2025
தினமும் ஒரு பொன்மொழி!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739207358781_785-normal-WIFI.webp)
➤ தோல்வியடைந்தவர்களின் சரித்திரங்களைப் படியுங்கள், அதிலிருந்து தான் வெற்றிக்கான வழி கிடைக்கும் ➤ இலக்கை குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும்புள்ளி தான் ➤ ஆண்டவன் சோதிப்பது எல்லாரையும் இல்லை; சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டும் தான். ➤ சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டும் என்றால் முதலில் சூரியனைப் போல எரியக் கற்றுக்கொள்ள வேண்டும் – புத்தர்.