News February 10, 2025
கும்பமேளாவில் பங்கேற்கிறார் குடியரசுத் தலைவர்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739133330097_785-normal-WIFI.webp)
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று (பிப்.10) மகா கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உள்ளார். இதையொட்டி, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. PM மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் ஏற்கெனவே நீராடி சென்றுள்ளனர். இதுவரை 35 கோடிக்கும் அதிகமான மக்கள் நீராடியுள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, வரும் 26ம் தேதி வரை இந்நிகழ்வு நடைபெற உள்ளது.
Similar News
News February 11, 2025
நகை அடகு நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1738535532075_1204-normal-WIFI.webp)
வங்கி அல்லாத அடகு நிறுவனங்கள், RBI விதிமுறைகளை பின்பற்றாமல் தங்க நகைகளை ஏலம் விடுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார். கடன் நிறுவனங்கள் அனைத்துக்குமே ஒரே மாதிரியான விதிமுறைகளைத் தான் RBI வகுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் நேரில் வராவிட்டாலும், நகை மதிப்பீடு முழுமை அடையாவிட்டாலும் ஏலம் விட முடியாது என்றார்.
News February 11, 2025
பும்ரா CTல் விளையாடுவாரா? இன்று தெரியும்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739226691257_785-normal-WIFI.webp)
இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அணியில் மாற்றம் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைவதால் BCCI இன்று இறுதி முடிவை எடுக்கும் என தெரிகிறது. முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் பும்ரா இன்னும் முழுமையாக குணமடையாததால், அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்போட்டியை அவர் தவறவிட்டால், அது IND அணிக்கு பெரும் இழப்பாக அமையும்.
News February 11, 2025
தினமும் ஒரு பொன்மொழி!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739207358781_785-normal-WIFI.webp)
➤ தோல்வியடைந்தவர்களின் சரித்திரங்களைப் படியுங்கள், அதிலிருந்து தான் வெற்றிக்கான வழி கிடைக்கும் ➤ இலக்கை குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும்புள்ளி தான் ➤ ஆண்டவன் சோதிப்பது எல்லாரையும் இல்லை; சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டும் தான். ➤ சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டும் என்றால் முதலில் சூரியனைப் போல எரியக் கற்றுக்கொள்ள வேண்டும் – புத்தர்.