News March 28, 2024

IPL: சூர்யகுமார் யாதவ் பங்கேற்க மாட்டார்

image

சூர்யகுமார் யாதவால், இன்னும் ஒரு சில ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க முடியாது என தகவல் வெளியாகியுள்ளது. குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர், தற்போது முழு உடல் தகுதியை பெரும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என தெரிவித்திருந்தார். தற்போது உடல் நலம் தேறி வரும் அவர், மேலும் ஒரு சில போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 13, 2026

அரியலூர் ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபாட்டை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள், டயர் டியூப், ரசாயனம் கலந்த பொருட்கள் ஆகியவற்றை தீயிட்டு எரிக்காமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News January 13, 2026

இடியுடன் கூடிய மழை வெளுக்கும்

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று பிற்பகல் 1 மணி வரை 15 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதன்படி, நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூரில் இடியுடன் மழையும், அரியலூர், திண்டுக்கல், மதுரை, மயிலாடுதுறை, நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, திருச்சியில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 13, 2026

வெந்த புண்ணுல வேல பாய்ச்சுன மொமண்ட்

image

விஜய்யின் கடைசி படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் விருந்தாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. ஏமாந்த ரசிகர்களை கொஞ்சம் தேற்றுவோம் என்ற எண்ணத்தில், தயாரிப்பாளர் தாணு ‘தெறி’ படத்தை வரும் 15-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்வதாக அறிவித்தார். ஆனால், இந்த படமும் தற்போது தள்ளிப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. வெந்த புண்ணுல வேல பாய்ச்சுன மொமண்ட் என விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

error: Content is protected !!