News March 28, 2024
தொகுதி மக்களுடனான பந்தம் கடைசி மூச்சு வரை தொடரும்

பிலிபிட் தொகுதி மக்களுடனான பந்தம், தனது கடைசி மூச்சு வரை தொடருமென பாஜக எம்.பி வருண் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக வாய்ப்பு மறுத்த நிலையில், அவர் மக்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘எம்.பி., பதவி வேண்டுமானால் முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், உங்கள் மகனாக வாழ்நாள் முழுவதும் தொகுதிக்கு சேவைச் செய்ய கடமைப்பட்டுள்ளேன். உங்களுக்காக என் வீட்டுக் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்’ என்றார்.
Similar News
News August 21, 2025
இன்னும் சற்றுநேரத்தில் … ரெடியா இருங்க

தவெக மாநாடு சற்றுநேரத்தில் தொடங்கவிருக்கிறது. நேற்று இரவு முதலே மாநாட்டு திடலில் வெயிலையும் பொருட்படுத்தாமல், விஜய்யை காண தொண்டர்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர். வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால், 4 மணிக்கு பதில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே (3 மணிக்கு) மாநாட்டு மேடைக்கு விஜய் வருகிறார். இதன் காரணமாக தற்போது ஆதவ், என்.ஆனந்த் வாக்கி டாக்கியுடன் மாநாடு மேடைக்கு வந்து ஆய்வு செய்கின்றனர்.
News August 21, 2025
அதிமுகவிற்கு இரட்டை நிலைப்பாடு சாதாரணமே: CM

நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்த, மத்திய அரசு கொண்டு வரும் கருப்பு சட்டங்களை திமுக எதிர்க்கும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். PM, CM பதவி பறிப்பு மசோதா, குடியுரிமை திருத்தச் சட்டம், SIR ஆகியவற்றை தாங்கள் எதிர்த்ததாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். சென்னையில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், இரட்டை நிலைப்பாடு என்பது அதிமுகவுக்கு சாதாரணமே என்று CM விமர்சித்துள்ளார்.
News August 21, 2025
பொதுச்செயலாளர் பதவி வழக்கு.. EPSக்கு பின்னடைவு!

அதிமுக பொதுச் செயலாளராக EPS தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்குக்கு தடை விதித்த உத்தரவை ஐகோர்ட் வாபஸ் வாங்கியுள்ளது. EPS-ன் மனுவை ஏற்கெனவே உரிமையில் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது ஐகோர்ட்டும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், இது அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.