News February 9, 2025
ஆடு மேய்க்கும் தொழிலாளி பாம்பு கடித்து உயிரிழப்பு

அருப்புக்கோட்டை அருகே கட்ட கஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(38). ஆடு, மாடுகள் மேய்க்கும் தொழில் செய்து வந்த செந்தில்குமார் பிள்ளையார் ஊரணி அருகே ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த போது அவரது காலில் விஷப்பாம்பு கடித்துள்ளது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செந்தில்குமார் உயிரிழந்தார். தாலுகா போலீசார் இது குறித்து நேற்று (பிப்.9) வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 3, 2026
விருதுநகர்: சொத்து பத்திரம் இனி உங்க போனில்

விருதுநகர் மக்களே, <
News March 3, 2026
ராஜபாளையத்தில் மீண்டும் போட்டியிட திமுக MLA விருப்பம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு முன்னிலையில் இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளார். உடன் திமுக நகரச் செயலாளர் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
News March 3, 2026
சிவகாசி அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை

சிவகாசி அருகே சித்தமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மாரீஸ்வரன் (32). திருமணமான இவருக்கு 2 பெண்குழந்தைகள் உள்ளனர். இவரது குடி பழக்கத்தால் சில தினங்களுக்கு முன் தகராறு எழுந்துள்ளது. இதனால் அவர் மனைவி, குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த மாரீஸ்வரன், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவர் விருதுநகர் G.H-ல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.


