News February 9, 2025

திறந்த சில மணி நேரத்திலேயே மூடப்பட்ட பறவைகள் பூங்கா

image

திருச்சி குடமுருட்டி பாலம் அருகே பறவைகள் பூங்கா இன்று திறக்கப்பட்டது. இதனை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அவர் சென்ற சில மணி நேரங்களிலேயே பறவைகள் பூங்கா மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஆர்வமாக வந்தவர்கள் சோகமாக திரும்பிச் சென்றனர். காலை 9 மணி முதல் ஆறு மணி வரை அனுமதி நேரம் என்பதால், 5 மணி ஆகிவிட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 4, 2026

இந்தியில் எழுதப்பட்ட பெயர் பலகை அகற்றம்

image

திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவு வாயிலில் இந்தியில் எழுதப்பட்ட பெயர் பலகைகளை ரயில்வே நிர்வாகத்தினர் அகற்றி வருகின்றனர். ஒட்டுமொத்த தமிழகத்தில் உள்ள சமூக ஆர்வலர்களும் திமுக, அதிமுக, நாம் தமிழர் என பல்வேறு அரசியல் கட்சியினரும் ஒருமித்த குரல் எழுப்பினர். அதனைத் தொட்டர்ந்து ரயில்வே துறை நிர்வாகம் சார்பில் பெயர் பலகையை அகற்றினர்.

News March 4, 2026

திருச்சி: G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

image

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக Payment Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். அவ்வாறு வரலைவில்லை என்றால் கவலை வேண்டாம். HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். பணம் வருவதற்கு 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். SHARE பண்ணுங்க!

News March 4, 2026

திருச்சி: லஞ்சம் பெற்ற மின் உதவி பொறியாளர் கைது

image

திருச்சி மாவட்டம் மருங்காபுரி உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் உதவி மின் பொறியாளராக பார்த்திபன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரிடமிருந்து ரூ.5000 இலவச மின் விநியோகம் பெறுவதற்கு கையூட்டு பெறும்போது, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

error: Content is protected !!