News March 28, 2024

₹3 லட்சம் கோடியை ஈட்டிய முதலீட்டாளர்கள்!

image

2023-24ஆம் நிதியாண்டின் கடைசி வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்ந்து 73,635 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 219 புள்ளிகள் உயர்ந்து 22,343 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. இதனால் முதலீட்டாளர்கள் வசமுள்ள பங்குகளின் மதிப்பு, ஒரே நாளில் ₹3 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது.

Similar News

News January 17, 2026

BREAKING: விஜய் அதிரடி முடிவு..!

image

தவெக சார்பில் போட்டியிட விரும்புபவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, அவற்றை பூர்த்தி செய்து தலைமைக்கு ஆன்லைன் வழியாக அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாம். வேட்பாளர் தேர்வில் வெளிப்படை தன்மை, இளைஞர்கள், பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவே ஆன்லைன் மூலம் விவரங்களை பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

News January 17, 2026

பிளவுவாத அரசியலை மக்கள் முறியடித்தனர்: அண்ணாமலை

image

பிராந்தியம், மொழி அடிப்படையில் மக்களை பிளவுபடுத்த முயன்ற எதிர்க்கட்சிகளின் அரசியலை <<18877166>>மும்பை<<>> மக்கள் முறியடித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஒற்றுமை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை முன்னிறுத்தும் பாஜக தலைமையிலான கூட்டணியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, தேர்தல் பிரசாரத்தின் போது மும்பை சர்வதேச நகரம் என <<18833393>>அண்ணாமலை<<>> கூறியதால் அங்கு பதற்றம் நிலவியது.

News January 17, 2026

CM ஸ்டாலின் கொடி அசைவில் சீறும் காளைகள்!

image

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து பார்வையிட உள்ளார். அதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ராமநாதபுரத்தில் ₹3 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரனாரின் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை CM ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

error: Content is protected !!