News February 9, 2025
31 நக்சல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தில் 31 நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும் வெடி குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 2 போலீசாரும் உயிரிழந்தனர். நக்சல் இல்லா நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆண்டு மட்டும் சத்தீஸ்கரில் 81 நக்சல்களும், கடந்த ஆண்டு 219 நக்சல்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
Similar News
News September 9, 2025
நேபாள் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

நேபாளத்தில் பதற்றம் அதிகரித்துள்ளதால், அங்கு வாழும் இந்தியர்களுக்கு அவசர உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அவசர உதவிக்கு +977 – 9808602881, 9810326134 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் வெளியே வர வேண்டாம் எனவும், பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றவும் இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
News September 9, 2025
தமிழ் நடிகைக்கு திருமணம் முடிந்தது ❤️PHOTO❤️

ராமின் ‘பறந்து போ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி. தற்போது அவருக்கு திருமணம் முடிந்துள்ளது. கணவருடன் கைகோர்த்தபடி இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், ‘No Sounds, No lights, No Crowd. #justmarried’ என குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில், கணவர் முகத்தை அவர் காட்டவில்லை. கிரேஸ் ஆண்டனிக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
News September 9, 2025
ராணுவத்தின் கட்டுப்பாட்டில் செல்லும் நேபாளம்

ஜென் Z இளைஞர்களின் போராட்டத்தால் நேபாளத்தின் ஆட்சியே கவிழ்ந்துவிட்டது. பிரதமர் சர்மா ஒலி ராஜிநாமா செய்துவிட்டார். இப்போது அவர் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர்கள் பலரும் தலைமறைவாகிவிட்டனர். இந்நிலையில், இந்த வன்முறை போராட்டத்தின் விளைவாக ராணுவம் ஆட்சியை கட்டுப்பாட்டில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு மீண்டும் ஜனநாயகம் திரும்புமா? அதுவும் ஒரு வங்கதேசமாக மாறுமா?