News February 9, 2025
டெல்லியிலும் காங்கிரஸுக்கு அதிர்ச்சி அளித்த ஓவைசி

டெல்லியில் 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட AIMIM கட்சி, அந்த இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸை 4ஆம் இடத்துக்கு தள்ளியுள்ளது. ஓக்லா மற்றும் முஸ்தபாபாத் தொகுதிகளில் போட்டியிட்ட AIMIM கட்சி வேட்பாளர்கள் 3ம் இடத்தை பிடித்துள்ளனர்.
ஓக்லா தொகுதியில் ஆம் ஆத்மியும், முஸ்தபாபாத் தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றது. அடுத்த தேர்தலில் AIMIM அதிக தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News September 9, 2025
ராணுவத்தின் கட்டுப்பாட்டில் செல்லும் நேபாளம்

ஜென் Z இளைஞர்களின் போராட்டத்தால் நேபாளத்தின் ஆட்சியே கவிழ்ந்துவிட்டது. பிரதமர் சர்மா ஒலி ராஜிநாமா செய்துவிட்டார். இப்போது அவர் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர்கள் பலரும் தலைமறைவாகிவிட்டனர். இந்நிலையில், இந்த வன்முறை போராட்டத்தின் விளைவாக ராணுவம் ஆட்சியை கட்டுப்பாட்டில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு மீண்டும் ஜனநாயகம் திரும்புமா? அதுவும் ஒரு வங்கதேசமாக மாறுமா?
News September 9, 2025
நன்றி.. நன்றி.. முற்றுப்புள்ளி வைத்தார் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், BJP கூட்டணி வெற்றியடைய வேண்டும் என அமித்ஷாவிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். அதிமுக வலிமை பெற வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்று கூறினார். அப்போது, EPS, கட்சி நடவடிக்கை குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு, நன்றி.. நன்றி.. என கையெடுத்து கும்பிட்டு, சர்ச்சை கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் காரில் வேகமாக சென்றார்.
News September 9, 2025
செங்கோட்டையன் டெல்லி சென்றது இதற்குத் தானாம்!

மத்திய அமைச்சர்களை சந்தித்தது ஏன் என செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ஹரித்வார் போவதற்கு டெல்லிக்கு புறப்பட்ட தனக்கு, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க அனுமதி கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார். அப்போது, ஆபிஸ், கல்வி நிலையங்கள் செல்வோரின் வசதிக்கேற்ப ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரத்தை மாற்றியமைக்க வலியுறுத்தியதாக தெரிவித்தாா். ஹரித்வார் செல்லாமலேயே அவர் தமிழகம் திரும்பியுள்ளார்.