News February 9, 2025

புதிய திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்ய சிறப்பு முகாம்

image

தஞ்சை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அவர்களின் சுய விவரங்களை “விவசாயிகள் பெறும் பதிவேடு” என்னும் புதிய திட்டத்தின் கீழ் பதிவு செய்ய இன்று முதல் கிராமங்கள் தோறும் ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள் தகுந்த ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 4, 2026

தஞ்சாவூர்: 2வது முறை திமுக ஆட்சிக்கு வரமுடியாது – விஜய்

image

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் இன்று (மார்ச் 4) தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பேசிய விஜய், “மோசடி ஆட்சியில் முக்கியமான ஆட்சி இது. இரண்டாவது முறை ஆட்சிக்கு வரலாம் என நினைக்காதீங்க. திமுக இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததே கிடையாது. விஜய்யை ஒழிக்கவே முடியாது.” என கூறியுள்ளார்.

News March 4, 2026

தஞ்சாவூர்: விவசாய குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன் – விஜய்

image

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் இன்று (மார்ச் 4) தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பேசிய விஜய், “எனக்கு விவசாயத்தைப் பற்றித் தெரியாது. நானும் டெல்டாகாரன் என மற்றவர்கள் காதில் டால்டா ஊற்றமாட்டேன். ஆனால், அடுத்த ஜென்மத்தில் விவசாய குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன்.” என கூறியுள்ளார்.

News March 4, 2026

தஞ்சாவூர்: தமிழ்நாட்டின் ஒரே பிரதிநிதி தவெக – விஜய்

image

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் இன்று (மார்ச் 4) தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பேசிய விஜய், “தமிழ்நாட்டின் ஒரே பிரதிநிதியாக, உண்மையான பிரதிநிதியாக நாம் இருக்கிறோம். ஓம் சக்தி, பராசக்தி திமுக ஒரு தீய சக்தி என அனைவரும் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். இந்த அணி, அந்த அணி, டெல்லி அணி என எல்லா அணியையும் தவெக அடித்து நொறுக்கும்.” என கூறியுள்ளார்.

error: Content is protected !!