News February 9, 2025
திருப்பூரில் ஏற்றுமதி ரூ. 40 ஆயிரம் கோடியை எட்டும்!

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், கடந்த, 2022 -23ம் ஆண்டில், 35 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதியானது. பின், 2023 ஏப்., மாதம் துவங்கி, 2024 மார்ச் இறுதி வரையில், 31,250 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே ஏற்றுமதி நடந்தது. நடப்பு நிதியாண்டில் திருப்பூரில் ஏற்றுமதி அதிகரித்து, தற்போது வரை 23,637 கோடி ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இந்த நிதியாண்டில் ஏற்றுமதி, 40 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும்.
Similar News
News March 6, 2026
திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பூர் மாநகரில் இன்று (மார்.05) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 5, 2026
கோடைகால குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஆலோசனை

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மனிஷ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செல்வராணி, ஊராட்சிகள் துறை உதவி இயக்குனர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
News March 5, 2026
திருப்பூர்: பசு மாடு வாங்க ரூ.1,00,000

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


