News February 9, 2025

வேலூர் ரயிலில் தள்ளி விடப்பட்ட பெண்ணுக்கு 3 லட்சம் நிவாரண நிதி

image

வேலூர் மாவட்டம் காட்பாடி கே.வி.குப்பம் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து கீழே தள்ளியதில் படுகாயம் அடைந்த பெண் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பெண்ணின் முழு மருத்துவ செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்றும் மேலும் மூன்று லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Similar News

News March 12, 2026

வேலூர் : கேஸ் முகவர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை

image

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோலிய பொருட்கள் இருப்பு குறித்து எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்து. இதில் பேசிய ஆட்சியர் சுப்புலட்சுமி காஸ் சிலிண்டர்கள் பதுக்கல் செய்வதோ அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதோ குற்றமாகும். கேஸ் சிலிண்டர்களை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

News March 12, 2026

பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம்

image

வேலூருக்குட்பட்ட சாத்துமதுரை, அணைக்கட்டுக்குட்பட்ட பின்னத்துரை, காட்பாடிக்குட்பட்ட கொண்டேரிபள்ளி, குடியாத்தத்திற்குட்பட்ட பெரும்பாடி, கே.வி.குப்பத்திற்குட்பட்ட வேப்பங்கநேரி, பேரணாம்பட்டுக்குட்பட்ட எருக்கம்பட்டு ஆகிய கிராமங்களில் வருகிற 14-ந் தேதி பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் கூறியுள்ளார்.

News March 12, 2026

வேலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து இருசக்கர வாகனத்திற்கான மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரிடம் படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் மார்ச்.12க்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு ஆட்சியர் சுப்புலட்சுமி கூறியுள்ளார்.

error: Content is protected !!