News March 28, 2024

கிருஷ்ணகிரி: ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

image

ஓசூர்:கெலமங்கலம் அடுத்த சின்னட்டியை சேர்ந்தவர் முருகேசன்(48). இவர் நேற்று முன்தினம் இரவு, கர்நாடகம், அத்திப்பள்ளிக்கு பைக்கில் சென்றார். அப்போது குந்துமாரனப்பள்ளி அருகே தரைமட்ட பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக்குடன் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். நேற்று காலை கெலமங்கலம் போலீசார் சடலத்தை மீட்டனர். அவரது சாவிற்கு காரணம், அலட்சியமான சாலை பணிதான் என உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Similar News

News October 14, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (அக். 14) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 14, 2025

ஓசூரில் குழந்தைகள் காப்பகம் முதல்வர் திறந்து வைத்தார்

image

தமிழக தொழில் துறை சார்பில் ஓசூரில் தொழில் பூங்கா வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தை, தமிழக முதலவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (அக்.14) காணொலி வாயிலாக திறந்து வைத்தார். தொழில் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு குழந்தைகளை பாதுகாப்பாக வைக்க இந்த காப்பகம் பெரும் உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News October 14, 2025

கிருஷ்ணகிரி: தோட்டக்கலை பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில் செயல்படும் தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் தோட்டக்கலை பட்டயப் படிப்புக்கு காலியாக உள்ள 11 இடங்களுக்கு அக். 15 மற்றும் 31-ஆம் தேதிகளில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து அந்த மையத்தின் துணை இயக்குநர் து.மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.மேலும் விவரங்களுக்கு 73587 85872, 72007 83122 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்

error: Content is protected !!