News February 9, 2025

உடுமலை பஞ்சலிங்கேஸ்வரர் கோயில்

image

உடுமலை திருமூர்த்திமலை அடிவாரத்தில் உள்ளது பஞ்சலிங்கேஸ்வரர் கோயில். இங்கு மூலிகை குணமுள்ள பஞ்சலிங்க அருவி, சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. மேலும் இங்கு அருவி இருக்கும் இடத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலில், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய 3 கடவுள்களும் ஒருங்கே அமைந்துள்ளதால் இது தமிழக அளவில் புகழ்பெற்ற கோயிலாக உள்ளது. இந்த அடிவாரத்தில் அமர்ந்து இறைவனை வேண்டினால் நன்மை நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

Similar News

News March 3, 2026

பல்லடம் தொகுதியில் இவரா?

image

பல்லடம் சட்டமன்றத் தொகுதியில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, பல்லடம் நகரச் செயலாளர் ராஜேந்திரகுமார் நேற்று விருப்ப மனு தாக்கல் செய்தார். சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது, பல்லடம் திமுக நிர்வாகிகள், இளைஞர் அணியினர் மற்றும் கட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

News March 3, 2026

அவிநாசி அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

கோவை ரத்தனபுரி, தாசப்பன் வீதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (41). தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவினாசி அருகே கொச்சி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, அவருக்கு பின்னால் வந்த லாரி, ஸ்டீபன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்த ஸ்டீபன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக
உயிரிழந்தார்.

News March 3, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (மார்.2) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

error: Content is protected !!