News March 28, 2024
தூத்துக்குடி: வங்கி அதிகாரி மீது தாக்குதல்

தூத்துக்குடி பாரதி நகரை சேர்ந்தவர் சிவகுமார். இவர் பிரபல தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். சிவகுமார் சங்கராபுரத்தை சேர்ந்த பழனிகுமார் வீட்டிற்கு சென்று வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்த வலியுறுத்தியுள்ளார். அப்போது, பழனி குமார், அவரது மகன் ஷியாம் ஆகியோர் சேர்ந்து இவரை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 8, 2026
தூத்துக்குடியில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 19 ஆண்கள், 3 பெண்கள், 5 மீனவ இளைஞர்கள் என மொத்தம் 27 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10-ம் வகுப்பு படித்த 18 முதல் 45 வயது உடையவர்கள் வரும் 12-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை தூத்துக்குடியில் உள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது
News February 8, 2026
தூத்துக்குடி எஸ்பி எச்சரிக்கை

தூத்துக்குடியில் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு விசாரணைக்கு ஆஜராகாத 99 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 17 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 20 குற்றவாளிகள் மீது பிணைப்பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
News February 8, 2026
தூத்துக்குடி: 23 காலிபணிடங்களை அறிவித்த ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு ஒப்பந்த முறையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் <


