News February 9, 2025
மீண்டும் இந்திய அணிக்கு கேப்டனாகும் கோலி?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739071757637_1231-normal-WIFI.webp)
ரோஹித் ஃபார்ம் மீது கடுமையான விமர்சனங்கள் இருப்பதால், BGT கடைசி போட்டியிலேயே களமிறங்கவில்லை. இதனால் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மீண்டும் கோலியை கேப்டனாக்க தனது விருப்பத்தை கம்பீர் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இது அதிகாரப்பூர்வ செய்தி இல்லை. BGT முதல் டெஸ்டில் கேப்டனான பும்ரா சிறப்பாக செயல்பட்டாலும், ஏன் இந்த மாற்றம் என தெரியவில்லை?
Similar News
News February 10, 2025
தினமும் லேட்டாக தூங்குபவரா நீங்கள்?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739194431846_347-normal-WIFI.webp)
தினமும் இரவில் யூடியூப், வெப்சீரிஸ், ரீல்ஸ் பார்த்துவிட்டு லேட்டாக தூங்குபவரா நீங்கள்? நள்ளிரவு 1 மணிக்கு மேல் தூங்கச் செல்பவர்களுக்கு மனநலப் பாதிப்புகள் (மனச்சோர்வு, பதற்றம்) ஏற்படும் வாய்ப்பு 20-40% அதிகம் என்கிறது ஸ்டான்போர்ட் பல்கலை.,யின் ஆய்வு. நீங்கள் எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள் என்பதைவிட, எத்தனை மணிக்கு தூங்கப் போகிறீர்கள் என்பதே உங்கள் மனநலத்தை தீர்மானிக்கிறதாம். உங்க பெட் டைம் என்ன?
News February 10, 2025
கிருஷ்ணகிரியில் நாய் கடித்து சிறுவன் பலி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1737269737504_1241-normal-WIFI.webp)
கிருஷ்ணகிரி அருகே தெரு நாய் கடித்ததில் 9 வயது சிறுவன் உயிரிழந்தான். நந்தீஷ் என்ற அச்சிறுவன் 5 நாள்களுக்கு முன்னர் பள்ளிக்கு செல்லும்போது நாய் கடித்துள்ளது. அதனை அவன் வீட்டில் சொல்லாமல் இருந்துள்ளான். இன்று காலை சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பெற்றோர் ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் செல்லவே, அங்கு மருத்துவரிடம் நாய் கடித்ததைக் கூறியுள்ளான். பின்னர் சில மணி நேரங்களில் அவனது உயிர் பிரிந்தது.
News February 10, 2025
டெல்லியில் அதிமுக அலுவலகம் திறப்பு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739196198606_1031-normal-WIFI.webp)
டெல்லியில் ரூ.10 கோடியில் கட்டப்பட்ட அதிமுக அலுவலகத்தை காணொலி காட்சி வாயிலாக இபிஎஸ் திறந்து வைத்துள்ளார். 13 ஆயிரத்து 20 சதுர அடி பரப்பில் தரைத்தளம் மற்றும் 3 தளங்களுடன் இந்த கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பணி கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த கட்டடத்துக்கு ‘புரட்சித் தலைவர் எம்ஜிஆர்- புரட்சித் தலைவி அம்மா மாளிகை’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.