News February 9, 2025
கரூரில் டிரைவரிடம் பணம் பறித்த திருநங்கைகள் கைது

தேனி மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார், (47) மதுரை தேசிய நெடுஞ்சாலை திருக்காம்புலியூர் பகுதியில் சென்றபோது கரூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த திருநங்கைகள் அனிதா (26) மீரா (20) ஆகியோர், பொலிரோ காரை வழிமறித்து டிரைவர் சிவக்குமார் வைத்திருந்த ரூ 1,27,100 பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதுகுறித்து சிவகுமார் அளித்த புகாரின் படி டவுன் போலீசார் திருநங்கைகள் அனிதா, மீரா ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
Similar News
News March 4, 2026
கரூர் அருகே பரபரப்பு; அரிவாள் வெட்டு சம்பவம்!

வெண்ணமலை பகுதியை சேர்ந்த ஜெயபாஸ்கர் – கார்த்திகா தம்பதியினர். ஜெயபாஸ்கருக்கும், தமிழ்செல்வன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழ்செல்வன் நேற்று ஜெயபாஸ்கர் வீட்டிற்கு சென்று அரிவாளால் ஜெயபாஸ்கர் தலையில் வெட்டியுள்ளார். தடுக்க வந்த கார்த்திகாவையும் வெட்டினார். இதுகுறித்து கார்த்திகாவின் தாயார் தலைமைக் காவலர் அகிலா வெங்கமேடு போலீசில் புகார் அளித்துள்ளார்.
News March 4, 2026
அறித்தார் கரூர் கலெக்டர்!

கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க கரூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி முகாம் ஏப்ரல் 28 வரை நடைபெறுகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் 9,450 பேருக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இத்தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. பாதுகாப்பான இத்தடுப்பூசியை சிறுமிகள் செலுத்தி கொள்வதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
News March 4, 2026
கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.3) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.4) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


