News February 9, 2025
பிப்ரவரி 11ஆம் தேதி நெல்லையில் மதுக்கடைகள் மூடல்

நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தால் நடத்தப்படும் மதுபான கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் ஆகியவை பிப். 11ஆம் தேதி மூடப்படுகிறது .அதனை மீறி மதுபாட்டில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Similar News
News November 15, 2025
நெல்லை: பைக் திருட்டு.. தவெக நிர்வாகி கைது!

விஎம் சத்திரத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணனின் பைக் கடந்த 12ம் தேதி புதிய பஸ் நிலையத்தில் திருடுபோனது. போலீசில் புகார் அளித்தார். சிறிது நேரத்தில் இருவர் பைக்கை தள்ளி வந்த போது போலீசிடம் மாட்டிக் கொண்டனர். விசாரணையில் அவர்களில் ஒருவர் தவெக நிர்வாகி முத்துக்குமார் என்பதும் மற்றொருவர் தங்க ராஜா என்பதும் இன்று தெரிய வந்தது. பெட்ரோல் காலியானதால் பைக்கை அதே இடத்தில் விட வந்த போது மாட்டிக்கொண்டனர்.
News November 15, 2025
நெல்லை: ரேஷன் காட்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

நெல்லை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News November 15, 2025
நெல்லை: சிறுத்தை தாக்கியதில் பெண் காயம்

காரையாரில் வசித்து வருபவர் ஜோயி. இவரது மனைவி சுஜதா இத்தம்பதியினருக்கு இரண்டு ஆண் மகன்கள். அதில் ஒருவர் மாற்றுத்திறனாளி. இவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர்கள் குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அந்த வீட்டில் வளர்த்து வரும் நாயை பிடிக்க வந்த சிறுத்தையை தடுக்க முயன்ற போது சிறுத்தை தாக்கியதில் சுஜாதா காயமடைந்தார்.


