News February 9, 2025
இந்தியாவை வீழ்த்தியே ஆகணும்: பாக். PMன் கண்டிஷன்!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739063739269_1231-normal-WIFI.webp)
இந்தியா – பாக். இடையேயான கிரிக்கெட் போட்டியில், தோற்று விடவே கூடாது என்ற வெறியில் தான் இருநாட்டு ரசிகர்களும் இருப்பார்கள். அதே ஆசையை தான் பாக். பிரதமர் வெளிப்படுத்தி இருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதைப் போலவே, இந்திய அணியை வீழ்த்துவதே உண்மையான டாஸ்க் என அவர் பேசியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டுள்ள இந்தியா – பாக் மோதும் போட்டி வரும் 23.ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது.
Similar News
News February 10, 2025
பேட்டிங்கை ரசித்தேன்: ரோஹித் நெகிழ்ச்சி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739145644561_785-normal-WIFI.webp)
Engக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அணிக்காக நின்றது மகிழ்ச்சி அளித்ததாக ரோஹித் ஷர்மா நெகிழ்ந்துள்ளார். தனது பேட்டிங்கை ரசித்ததாக கூறிய அவர், பேட்டிங் செய்ய வெளியே வந்ததும் முடிந்தவரை அதிக ரன்கள் எடுக்க முடிவு செய்ததாகவும், தனது உடலை குறிவைத்து வீசப்பட்ட பந்துகளில் சரியான திட்டங்களை செயல்படுத்தியதாகவும் பகிர்ந்தார். அத்துடன், கில் மிகவும் உன்னதமான வீரர் என்றும் பாராட்டினார்.
News February 10, 2025
போருக்கு முற்றுப்புள்ளி? புடினுடன் டிரம்ப் பேச்சு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1737388407754_1173-normal-WIFI.webp)
உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் பேசியதாக USA அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். போரில் உயிர் பலி ஏற்படுவதை தான் விரும்பவில்லை என புடின் பகிர்ந்ததாகவும் தெரிவித்தார். போரில் லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் நம் குழந்தைகள் போன்றவர்கள். இதற்கு மேலும் உயிர் பலி நிகழ்வதை புடின் தடுத்து நிறுத்துவார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News February 10, 2025
ரேஷன் கடைகளில் வருகிறது நவீன தராசு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1735810493076_1204-normal-WIFI.webp)
ரேஷன் கடைகளில் விரைவில் புதிய வகை தராசுகள் பயன்படுத்தப்பட உள்ளன. புளூடூத் (அ) USB கேபிளை பாயின்ட் ஆப் சேல் கருவியுடன் இணைத்து பயன்படுத்தும் வகையிலான புதிய எலக்ட்ரானிக் தராசுகள், அளவைக்கு பயன்படுத்தப்பட உள்ளன. அளவையாளர், தராசில் எவ்வளவு எடைக்கு பொருள் வைக்கிறாரோ அந்த எடையளவு உடனுக்குடன் ரசீதாக வழங்கப்படும். இதனால், ரேஷன் பொருட்களை எடை குறைவாக வினியோகிப்பது போன்ற முறைகேடுகள் தடுக்கப்படும்.