News February 9, 2025
போதை பொருட்கள் தொடர்பாக புகார் அளிக்க ‘வாட்ஸ் ஆப்’ எண்

தமிழக அரசு ‘போதை பொருள் இல்லா தமிழ்நாடு’ எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், மது மற்றும் போதை பொருட்கள் தொடர்பான புகாரை, 90800 34763 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலம் தெரிவிக்கலாம். இதேபோன்று மாநில அளவில் புகார் அளிப்பதற்காக, 10581 என்ற கட்டணம் இல்லா உதவி எண் செயல்பட்டு வருகிறது என்றும் மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 8, 2026
கள்ளக்குறிச்சி: மகளிருக்கு இந்த எண் அவசியம்!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு சார்பாக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் ஏதேனும் பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 8, 2026
கள்ளக்குறிச்சியில் தூக்கிட்டு தற்கொலை!

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள தாவடிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி சித்ரா(44). இவருடைய கணவர் வேலு கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால், குடும்ப செலவிற்கு பணம் இல்லாததால் சித்ரா அக்கம்பக்கத்தினரிடம் கடன் வாங்கியதாகத் தெரிகிறது. வாங்கிய பணத்தை அடைக்க முடியாததால் மனமுடைந்த சித்ரா, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News March 8, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி காவலர் விவரங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு முதல் தேதி காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


