News March 28, 2024
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் இருவர் கைது

பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக மேலும் இருவரை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரம் கஃபேயில் மார்ச் 1ஆம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் ஏற்கெனவே 2 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், குண்டு வெடிப்பை நிகழ்த்தியவருடன் நேரடித் தொடர்பில் இருந்ததாக கருதப்படும் மேலும் இருவர் இன்று கைதாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News January 1, 2026
தவெக கூட்டணியில் விசிக வருகிறதா? KAS பதில்

விஜய் மக்கள் சக்தியோடு CM-ஆக வருவார் எனவும், அதை எந்த சக்தியாலும் தடுத்து விட முடியாது என்றும் KAS தெரிவித்துள்ளார். திருப்பூரில் இன்று பேசிய அவர், <<18721651>>திருமா<<>> பேச்சால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும். மேலும், தவெக கூட்டணியில் விசிக வருகிறதா என்பதை விட, விசிக தொண்டர்கள் அனைவரும் தவெகவிற்கு வருகிறார்கள் என்பதே உண்மை எனத் தெரிவித்தார்.
News January 1, 2026
2025-ல் AI செய்த சிறப்பான சம்பவங்கள்

2025-ல் AI, வெறும் சக்திவாய்ந்த தொழில்நுட்பமாக மட்டும் பிரபலமடையவில்லை. உணர்ச்சி, படைப்பாற்றல், நகைச்சுவை, எளிதாக அணுகும்முறை ஆகியவற்றால் டிரெண்டானது. இந்த தொழில்நுட்பம் மனிதத்தன்மை வாய்ந்ததாக உணரப்பட்டது. அந்த வகையில் எதுவெல்லாம் டிரெண்டானது என்று, மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து பாருங்க. இதில் நீங்கள் எதை என்ஜாய் செய்தீங்க? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.
News January 1, 2026
திமுகவின் அடிமைகளான VCK, கம்யூனிஸ்ட் கட்சிகள்: பாஜக

தமிழகத்தில் செவிலியர்கள், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் என பல தரப்பினரும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தமிழிசை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் திமுக அரசுக்கு எதிராக திருமாவளவனோ, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களோ குரல் கொடுக்கவில்லை என்றும், அவர்கள் திமுகவின் அடிமைகளாக மாறிவிட்டதாகவும் கடுமையாக சாடியுள்ளார். மேலும் காங்கிரஸில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


