News February 9, 2025

கூட்டுறவு வங்கிகளில் ₹1 லட்சம் கோடி கடன் இலக்கு

image

கூட்டுறவு வங்கிகளில் நடப்பு நிதியாண்டில் அனைத்து பிரிவுகளிலும் ₹1 லட்சம் கோடி கடன்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, நகைக்கடன், பயிர்க்கடன் என ₹85,000 கோடிக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. நிதியாண்டு முடிவடைய ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில், இலக்கை அடைவது கடினமாகியுள்ளது. தொடர்ந்து, மகளிர் குழு, கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பிரிவில் கூடுதல் கவனம் செலுத்தி இலக்கை அடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News February 10, 2025

தினமும் ஒரு பொன்மொழி!

image

✍சட்டப்பூர்வமாக சரியான சில விஷயங்கள், நியாய ரீதியாக பார்த்தால் சரியானவை அல்ல.✍எதிரிகளை அழிப்பதற்கான சிறந்த வழி அவர்களை நண்பர்களாக்குவதுதான்.✍ஒரு வாக்குச்சீட்டு தோட்டாவை விட வலிமையானது.✍உதவி செய்யும் இதயம் இருப்பவனுக்கே, விமர்சிக்க உரிமை உண்டு.✍எல்லோரையும் நம்புவது பயங்கரமானது; யாரையும் நம்பாமல் இருப்பது அதிபயங்கரமானது.✍ ஏமாற்றுவதைக் காட்டிலும், தோற்றுப்போவது மரியாதைக்குரியது – ஆபிரகாம் லிங்கன்.

News February 10, 2025

மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் PM மோடி

image

தேர்வு எழுத உள்ள மாணவர்களை PM மோடி நேரடியாக சந்தித்து கலந்துரையாடும் பரிக்ஷா பே சர்ச்சா என்ற நிகழ்வு இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. 2018ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வின் 8வது ஆண்டு நிகழ்ச்சி இந்தாண்டு 8 பிரிவுகளாக நடத்தப்படுகிறது. தேர்வை எதிர்கொள்வது எப்படி, தேர்வு பயத்தை போக்குவது, கனவுகளை நினைவாக்க ஊக்குவிப்பது உள்ளிட்ட வகையில், 2,500 மாணவர்களுடன் மோடி கலந்துரையாட உள்ளார்.

News February 10, 2025

உங்கள் குழந்தைகளுக்கு போன் கொடுக்கிறீர்களா?

image

குழந்தைகள் அழுகையை நிறுத்த செல்போனைக் கொடுக்கிறீர்களா? அப்படியானால், நீங்கள் அவர்களுக்கு தீங்கு செய்கிறீர்கள். குழந்தைகள் 6 மாதத்திலிருந்து தங்களைச் சுற்றியுள்ள சூழலைப் பார்த்து பேசக் கற்றுக்கொள்கிறார்கள். இவ்வயதில் அவர்களிடம் போன் கொடுப்பதால், 3 வயது வரை பேச முடியாமல் போகும் அபாயம் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். எதிர்காலத்தில் ஆட்டிசம் போன்ற பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கின்றனர்.

error: Content is protected !!