News February 8, 2025
டெல்லியின் அடுத்த முதல்வர் இவர்தான்?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739009990995_1246-normal-WIFI.webp)
27 ஆண்டுகளுக்குப் பின் டெல்லியில் ஆட்சியை பிடித்திருக்கும் பாஜகவின் பர்வேஷ் வர்மா அடுத்த முதல்வர் ஆக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பாஜகவின் வெற்றி செய்தி கிடைத்த கையோடு அவர் அமித் ஷாவை நேரில் சந்தித்திருக்கிறார். டெல்லி முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகனான இவர், களத்தில் கெஜ்ரிவாலை எதிர்த்து பல மேடைகளில் முழங்கி, நேரடியாக அவரது சொந்த தொகுதியிலேயே வீழ்த்தியிருக்கிறார்.
Similar News
News February 8, 2025
உங்கள் மூளையை பாதிக்கும் தவறான 7 பழக்கங்கள்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739029749667_347-normal-WIFI.webp)
உடலின் மிக முக்கிய உறுப்பு மூளை. ஆரோக்கியமான டயட், உடற்பயிற்சிகள் மூலம் அதை ஆரோக்கியமாக வைக்கலாம். ஆனால், பின்வரும் பழக்கங்கள் மூளையை சேதப்படுத்தி அதன் வேலைகளை பாதிக்கும். அவை: *நாட்பட்ட மன அழுத்தம் *போதுமான தூக்கம் இல்லாதது *புகைப்பழக்கம் *அதிகம் இனிப்பு உட்கொள்வது *அதிக மதுப்பழக்கம் *உடலுழைப்பு இல்லாத லைஃப்ஸ்டைல். இவற்றை தவிர்த்தாலே, மூளை நன்றாக வேலை செய்யும் என்கின்றனர் மருத்துவர்கள்.
News February 8, 2025
3.99 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடன்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1738977720328_55-normal-WIFI.webp)
பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவித் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் 3.99 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர் என்று கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய இணையமைச்சர் தோகன் சாகு பதிலளித்துள்ளார். ஜன.30 வரை நாடு முழுவதும் 68 லட்சத்து 2 ஆயிரம் பேர் வியாபாரிகளுக்கான கடன் பெற்றுள்ளனர். பிரதமர் சுவநிதி திட்டம் மூலம் நேரடியாக பயனாளர்கள் வங்கிக் கணக்கில் கடன்தொகை செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News February 8, 2025
17 ஆண்டு திருமண வாழ்வை முறிக்கும் ஜெசிகா
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739026892957_1246-normal-WIFI.webp)
ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஜெசிகா ஆல்பா, தனது 17 ஆண்டுகால திருமண உறவை முறித்துக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இவருக்கும் கணவர் கேஷ் வாரனுக்கும் 2008ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளனர். விவாகாரத்துக்கான காரணம் குறித்து இருவரும் பொது வெளியில் கருத்து தெரிவிக்கவில்லை.